Stock News: இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்...
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதனன்று (3-04-2024) வர்த்தகத்தை பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதனன்று (3-04-2024) வர்த்தகத்தை பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.
சென்செக்ஸ் 271.96 புள்ளிகள் அல்லது 0.37% சரிவு கண்டு 73,631 புள்ளிகளுடன் உள்ளது. அதே போல் நிப்டி குறியீடு 83.60 புள்ளிகள் அல்லது 0.37% சரிவு கண்டு 22,369.70 புள்ளிகளுடன் உள்ளது.
இன்றைய வர்த்தக தொடக்க நிலவரங்களின் படி சுமார் 1,497 பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 987 பங்குகள் சரிவு கண்டுள்ளன, 121 பங்குகள் மாறாமல் இருந்து வருகிறது.
நிப்டி ஐடி பங்குகள் சற்றே ஏற்றம் கண்டு 34,838.15 புள்ளிகளுடன் உள்ளது. மும்பைப் பங்குச் சந்தை ஸ்மால் கேப் குறியீடு 314.61 புள்ளிகள் அதிகரித்து 45,337.67 புள்ளிகளுடன் உள்ளது. நிப்டி வங்கிக் குறியீடு 173 புள்ளிகள் சரிவு கண்டு 47,371.85 புள்ளிகளுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்து வருகிறது.
குறைவான தொடக்கத்துக்குக் காரணம்:
ஆசியப் பங்குச்சந்தைகளும் உலகப் பங்குச்சந்தைகளும் பொதுவாக மந்தமான தொடக்கம் கண்டதாலும் அமெரிக்கத் தரவுகளின் படி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் சுணக்கம் காட்டுகிறது என்ற செய்திகளினாலும் பங்குச் சந்தை இன்றும் சற்றே சுணக்கமாகத் தொடங்கியுள்ளன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
நால்கோ
கெய்ல்
செய்ல்
ஸ்ரீராம் பைனான்ஸ்
கொச்சின் ஷிப்யார்டு
அல்ட்ரா டெக் சிமெண்ட்
இறக்கம் கண்ட பங்குகள்:
பாரத் ஃபோர்ஜ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 83.34 ஆக உள்ளது.