2024-ம் ஆண்டு முதல் 5 மாதங்களில் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த தமிழ்நாடு!
2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தமிழ்நாடு ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 3 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தமிழ்நாடு ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 3 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ட்ரோன்களை தயாரிப்பதற்காக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. முக்கிய முதலீட்டாளர்களில் டெஸ்லாவின் போட்டி நிறுவனமான வின்ஃபாஸ்ட், டாடா பவர் மற்றும் ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகாட்ரான் போன்ற ஆப்பிள் நிறுவன சப்ளையர்களும் அடங்குவர். இந்த 7 லட்சம் கோடி முதலீடுகள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, என பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், குஜராத் மாநிலம் ரூ.26.33 ட்ரில்லியன் முதலீடுகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான முதலீட்டு அறிவிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கனவே அவை செயலில் உள்ளன என்று அரசு தரப்புகள் கூறுகின்றன.
![தமிழ்நாடு அரசு](https://images.yourstory.com/cs/18/8eea5c8008d911e9bb473d9d98ed1e05/tnworkhours-1682078660158.jpg?fm=png&auto=format&w=800)
சென்னை, ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை முதலீட்டாளர்களின் விருப்பமான நகரங்களாக உள்ளன. வணிகம் செய்ய ஏற்ற சூழல், ஒற்றைச் சாளர அனுமதி, முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நிலக் கொள்கை, திறமையான தொழிலாளர்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கிய சந்தைகளின் அருகாமை ஆகியவையே முதலீடுகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்று அரசு மற்றும் தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிய வேலைகளில் பல, முதலீடுகள் அதிகரித்திருக்கும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி சார்ந்தவையாக உள்ளது.
இதுபற்றி தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பிசினஸ் ஸ்டாண்டர்டிடம் கூறுகையில்,
"தொழில் தொடங்குவதற்கும், தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கும், முதலீட்டாளர்கள் எளிதாகச் செயல்படுவதற்கான நடைமுறைகளை அரசு நெறிப்படுத்தியுள்ளது. குறிப்பாக பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வல்லுநர்கள் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களின் ஆதரவு பெற்றவர்கள்," என்றார்.
மேலும், 25 துறைகளில் இருந்து சுமார் 170 அனுமதிகள் இந்த ஒற்றைச் சாளர முறை மூலம் எளிதாக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக்ஸில், மாநிலம் முன்னணி ஏற்றுமதியாளராக உள்ளது, 2024-இல் ஏற்றுமதி $9.56 பில்லியனைத் தொட்டது, 2023-இல் $5.37 பில்லியனில் இருந்து 78 சதவீதம் அதிகரித்து, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் கடந்துள்ளது.
தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தின் வர்த்தக சூழ்நிலைமைகள் குறித்து ஆர்வத்துடன் கருத்து கூறி வருகின்றனர். மாநிலத்தின் நலன்களுடன் முதலீட்டாளார்களின் நலன்களையும் பிணைப்பதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற மாநில நலன்களைக் காக்க முதலீட்டாளர்களுக்கு ஊக்கச் சலுகைகளையும், மானியங்களையும் தமிழக அரசு வழங்ககி வருவதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் உதவி: பிசினஸ் ஸ்டாண்டர்ட்