Stock News: சீனாவின் அதிரடி முடிவால் உச்சம் தொட்டம் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
கடந்த வாரத்தைப் போல் அல்லாமல் இந்த வாரத்தின் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரத்தைப் போல் அல்லாமல் இந்த வாரத்தின் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 324.72 புள்ளிகள் அதிகரித்து 62,829 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 94.15 புள்ளிகள் அதிகரித்து 18,656 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள்:
சீனாவில் நிலவி வரும் கொரோனா பரவலும், பொருளாதார நெருக்கடியும் ரியல் எஸ்டேட் துறையை மிகப்பெரிய சரிவை நோக்கி தள்ளியிருந்தது. நாட்டின் ரியல் எஸ்டேட் துறையானது வீட்டு விலை வீழ்ச்சி, வாங்குபவர்களின் தேவை, வாங்கும் திறன் குறைவு மற்றும் கடந்த ஆண்டு முதல் சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களைச் சூழ்ந்துள்ள கடன் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சீனா தேவையை அதிகரிக்கும் பொருட்டு சொத்து டெவலப்பர்களுக்கு சாதகமான சில முடிவுகளை எடுத்துள்ளது ஆசிய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலிடப்பட்ட சொத்து நிறுவனங்களுக்கான ஈக்விட்டி மறுநிதியளிப்பு மீதான தடையை சீனா நீக்கியதை ஆசிய பங்குச்சந்தைகள் நேற்று முதல் பலவீனமான நிலையைக் கடந்தன. இன்று காலை முதலே ஆசிய பங்குச்சந்தையான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உள்ளிட்டவை பச்சை வண்ணத்திற்கு மாறியுள்ளது.
மற்றொருபுறம் இந்தியாவில் தேசிய குறியீட்டு எண்ணான நிஃப்டியில் மெட்டலின் பங்குகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதும் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் காண காரணமாக அமைந்துள்ளது.
இறுதியாக அதானி குழுமத்திற்குச் சொந்தமான விஸ்வபிரதான் கமர்ஷியலுக்கு நிறுவனத்தின் புரமோட்டர் குழு RRPR நிறுவனத்தின் (NDTV) 99.5% பங்குகளை வழங்கியதை அடுத்து, டெல்லியில் டெலிவிஷனின் பங்குகள் 5% உயர்ந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
டாக்டர் ரெட்டிஸ்
ஹிண்டால்கோ
டாடா ஸ்டீல்
இறக்கம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஃபின்சர்வ்
டாடா மோட்டார்ஸ்
பிபிசிஎல்
எல்&டி
மாருதி சுஸுகி
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 81.60 ஆக உள்ளது.