Stock News: ஒரே நாளில் அதிரடி மாற்றம்; போக்கு காட்டும் இந்திய பங்குச்சந்தை!
நேற்று உயர்வுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
நேற்று உயர்வுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (28/03/2023):
கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. நேற்று சென்செக்ஸ், நிஃப்டி கிடுகிடுவென உயர்ந்தது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 20.26 புள்ளிகள் சரிந்து 57,591 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 42.20 புள்ளிகள் சரிந்து 16,941 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அதானி குழும நிறுவன பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருவது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டம் கண்ட அதானி பங்குகள்:
அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் மற்றும் என்டிடிவி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ
ஹெச்சிஎல் டெக்
ஹெச்டிஎஃப்சி லைஃப்
யுபிஎல்
கோல் இந்தியா
இறக்கம் கண்ட பங்குகள்:
பிபிசிஎல்
அதானி போர்ட்ஸ்
ஓஎன்ஜிசி
அதானி எண்டர்பிரைசஸ்
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 82.16 ஆக உள்ளது.
Gold Rate Chennai: தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்று மட்டும் இவ்வளவு குறைவா?