Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவு!

மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன் கிழமையன்று (15-05-2024) தொடக்கத்தில் உயர்வு போல் சென்றாலும் பிறகு தற்போதைய நிலவரப்படி பின்னடைவு கண்டு வருகிறது.

Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவு!

Wednesday May 15, 2024 , 1 min Read

மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன் கிழமையன்று (15-05-2024) தொடக்கத்தில் உயர்வு போல் சென்றாலும் பிறகு தற்போதைய நிலவரப்படி பின்னடைவு கண்டு வருகிறது.

சற்று முன் நிலவரப்படி, பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு சுமார் 192 புள்ளிகள் குறைந்து 72,912 ஆக உள்ளது. அதே போல், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 32.75 புள்ளிகள் குறைந்து 22,185.10 புள்ளிகளுடன் உள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் நிப்டி பேங்க் குறியீடு நிப்டி ஐடி குறியீடுகள் முறையே 136 மற்றும் 67 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. மும்பைப் பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு மட்டுமே 353 புள்ளிகள் உயர்ந்து 46,455 புள்ளிகளுடன் உள்ளது.

சரிவுக்கான காரணங்கள்:

இன்றைய தினம் சிப்லா நிறுவனத்தின் அறிவிப்பு ஒன்றினால் அதன் பங்குகளில் முதலீடு அதிகரிக்க ஆரம்பத்தில் உயர்ந்த பங்குச் சந்தைக் குறியீடுகள் சற்று முன் பின்னடைவு காணத் தொடங்கின. நிப்டி ஆட்டோ பங்குகள் தொடர்ந்து பின்னடைவு கண்டு வருவதால் இன்றைய பங்குச் சந்தை நிலவரம் குறைவாகியுள்ளன.

share

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

சீமன்ஸ்

சிப்ளா

என்.டி.பி.சி.

டாடா ஸ்டீல்

பார்தி ஏர்டெல்

இறக்கம் கண்ட பங்குகள்:

ஹெ.டி.எஃப்.சி.

டாடா மோட்டார்ஸ்

சன் பார்மா

இந்துஸ்தான் லீவர்

இந்திய ரூபாயின் மதிப்பு:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே குறைந்து இன்று ரூ. 83.49ஆக உள்ளது.