Stock News: மூலதன ஆதாய வரி உயர்வு எதிரொலி - பங்குச் சந்தைகள் சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமையான இன்று (24-07-2024) சரிவடைந்து மந்தமாகத் தொடங்கியுள்ளன. . சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 136 புள்ளிகள் குறைந்தது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமையான இன்று (24-07-2024) சரிவடைந்து மந்தமாகத் தொடங்கியுள்ளன. சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 136 புள்ளிகள் குறைந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 112 புள்ளிகள் குறைந்து 80,317.28 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 20 புள்ளிகள் மட்டுமே குறைந்து 24,459.10 புள்ளிகளாகவும் இருந்தன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 428 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. நிப்டி ஐடி குறியீடு 176 புள்ளிகள் அதிகரித்துள்ளது. பிஎஸ்.இ ஸ்மால் கேப் சுமார் 929 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
காரணம்:
மத்திய பட்ஜெட்டில் நேற்று நீண்ட கால மூலதன ஆதாயம் மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளதால் பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்தின் மீதான வரி அதிகரிக்கும், இதனால் பங்குச் சந்தைகளில் இன்று மந்த நிலை காணப்படுகிறது.
![stock market](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/443-1721799966955.jpg?fm=png&auto=format&w=800)
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஐடிசி
டைட்டன்
டாடா மோட்டார்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெச்.யு.எல்
பஜாஜ் பைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.69ஆக உள்ளது.