Stock News: சற்றே உயர்ந்த பங்குச்சந்தை; நிம்மதி பெருமூச்சுவிட்ட முதலீட்டாளர்கள்!
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 59.71 புள்ளிகள் அதிகரித்து 57,281 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 33.65 புள்ளிகள் அதிகரித்து 17,049 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
காரணம்: பணவீக்கத்திற்கு எதிரான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்க பொருளதாராம் மேலும் சரிவடையக்கூடும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். எனவே, நேற்று மாலை அமெரிக்க பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
அதேபோல், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி, பங்கு விற்பனை அதிகரிப்பு என கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்த ஆசிய பங்குச்சந்தைகள் இன்று முதல் நிலைப்பெற ஆரம்பித்துள்ளது. எனவே இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஐடிசி
பவர் கிரிட்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இன்ஃபோசிஸ்
விப்ரோ
ஐசிஐசிஐ வங்கி
நெஸ்லே
என்டிபிசி
இறக்கம் கண்ட பங்குகள்:
மாருதி
டைட்டன்
டாடா ஸ்டீல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் குறைந்து 81.45 ரூபாயாக உள்ளது.