சென்னையில் ‘நிதி நுட்ப நகரம்’ - தமிழக பட்ஜெட்டில் தொழில் துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகள்!
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த மின்வாகன, மருத்துவ சாதன பூங்காக்கள் அமைக்கப்படுவதோடு, சென்னையில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும் என தமிழ் நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மின் வாகன பூங்கா, காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவச் சாதனங்கள் பூங்கா மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருட்கள் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிது நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் நிதி நுட்பக் கொள்கை வெளியிடப்படும் என்றும், சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம், காவனூரில், ரூ.165 கோடி மதிப்பில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும். தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டாக இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பட்ஜெட்டில் தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டின் பங்கை அதிகரிப்பதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றுக்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும். முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிக்க, மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்பான தரவு தளம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்களைக் கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளில் 45,000 ஏக்கர் நில வங்கி தொகுப்புகள் உருவாக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், 1,100 ஏக்கரில் ரூ.1,000 கோடி செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா உருவாக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மின் வாகன பூங்கா, காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருட்கள் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம் ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
நிது நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் நிதி நுட்ப கொள்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென தனி பிரிவு உருவாக்கப்படும் மற்றும் சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம், காவனூரில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும். முதல் கட்டமாக நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதி நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும்.
சென்னையில் உள்ள டைடல் பூங்கா போல, விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் டைடல் பூங்கா உருவாக்கப்படும். கோவையில் 500 ஏக்கரில் ரூ.225 கோடியில் பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்.
தொழிற்வளர்ச்சியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகை ஆகிய மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
சிறு தொழில்கள்
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பிரச்சனைகளை ஆய்வு செய்ய மற்றும் இவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க குழு ஒன்று அமைக்கப்படும்.
சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஏதுவாக, தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
265 ஏக்கர் பரப்பில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. ஐந்து பெரிய தொழில் தொகுப்புகளை மருந்து மற்றும் பெட்ரோ ரசாயத் துறைகளிலும், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து துறைகளில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட உள்ளன.