Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

[TechSparks 2020] ‘நம் சமூகத்திற்காக உருவாக்க முடியும் என்றால், உலகிற்கான சேவையை உருவாக்கலாம்’ – ஓலா பவிஷ் அகர்வால்

தொழில்முனைவோர்கள் தாங்கள் கனவு காணும் இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெற்றிருப்பதாகவும், நம்முடைய சமூகத்திற்கு உருவாக்க முடிந்தால், உலகிற்கு உருவாக்க முடியும் என்றும், ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டார்.

[TechSparks 2020] ‘நம் சமூகத்திற்காக உருவாக்க முடியும் என்றால், உலகிற்கான சேவையை உருவாக்கலாம்’ – ஓலா பவிஷ் அகர்வால்

Monday November 02, 2020 , 2 min Read

TechSparks 2020 மாநாட்டின் நிறைவு நாள் அன்று, தாக்கம் மிகுந்த வர்த்தகத்தை உருவாக்கியதில் தான் பெற்ற மிகப்பெரிய பாடத்தை பகிர்ந்து கொண்ட ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால், விடாமுயற்சியே ஒரு தொழில்முனைவோரின் அதிகம் அறியப்படாத அம்சமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்,

அலுப்பூட்டும் விஷயங்களே மிகவும் மதிப்பு மிக்கதாக இருப்பதாக உணர்ந்ததை குறிப்பிட்டவர், “நம் தலைமுறையை எடுத்துக்கொண்டால், நாம் எப்போதும் கற்பனை செய்து வந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வர்த்தகம் மற்றும் மதிப்பை உருவாக்குவது தொடர்பான சுழல் நல்லவிதமாக இருக்கிறது. உலக பொருளாதாரத்திற்கான உற்பத்தியாளர்களாக நாம் மாற முடியும்,” என தெரிவித்தார்.
ஒலா

யுவர்ஸ்டோரியின் முன்னணி நிகழ்ச்சியான டெக்ஸ்பார்க்ஸ் 2020ல் பேசிய அகர்வால், அமைப்புகளில் நாம் அதிக நேரத்தையும், முயற்சியையும் செலவிட வேண்டும் என்றார்.

“நம் உள்ளூர் சமூகத்திற்கு நம்மால் உருவாக்க முடிந்தால், உலகிற்கும் உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தொழில்முனைவு என்பது, உங்களுக்கான தொலைநோக்கு மற்றும் நீங்கள் உருவாக்க விரும்புவதற்கான தொலைநோக்குடன் துவங்குவதாக குறிப்பிட்டவர், “இந்த பார்வை மற்றும் லட்சியத்தின் பின் உங்களை நிறுத்திக்கொண்டு, கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.


வேலையே கதி என இருக்கும் தொழில்முனைவோர் தான் தன்னுடைய மதிப்புக்குறியவர் என குறிப்பிட்டார்.

“இது எதிர்மறை பதமாக இருந்தாலும், நீங்கள் ஈடுபாடு கொண்டிருக்கும் போது, உலகம் என்ன சொல்லி அழைக்கிறது என்பது பிரச்சனை இல்லை. நாம் விரும்புவது எல்லாம், முடிவுகளை அளித்து, நீடித்த வழியில் லாபகரமான நிறுவனங்களை உருவாக்குவது தான். இதை வேகமாக உருவாக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் முன்வந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேடையை நிறுவனம் அளிப்ப்தாக ஓலா சி.இ.ஓ அகர்வால் குறிப்பிட்டார். “வளர்ச்சி அடைந்து, தங்கள் சிறந்த பணியை அளிக்க விரும்பும் லட்சிய மனிதர்களுக்கான இடமாக இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

உலகமே ஒரு குடும்பம் என்பது தான் நம்முடைய கலாச்சாரமாகும். இந்த குணமே இந்தியாவை, சீனா அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வேறுபடுத்துகிறது. இந்த கலாச்சாரத்தை நம்முடைய நிறுவனங்களில் கொண்டு வந்தால், உலகம் இந்தியாவை அதன் நற்பண்புகளால் அறியச்செய்யலாம் என்றார்.

ஒரு சில நேரங்களில் நிறுவனர்கள், நிறுவனத்தை அலட்சியம் செய்யும் அளவுக்கு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.

“மக்கள் தாங்களாக வளர்வார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நம்முடைய நிறுவனங்களில் நாம் அதிக நேரத்தை, முயற்சியை செலவிட வேண்டும். இந்தியர்களாக நம்முடைய கலாச்சாரம், நம்பிக்கை நாம் உருவாக்கும் நிறுவனங்களில் பிரதிபலிக்கிறது. நம் சமூகத்திற்காக உருவாக்க முடியும் என்றால் உலகிற்கு உருவாக்க முடியும்.”

ஓலா மதிப்பு வர்த்தகத்தில் இல்லை ஆனால் மதிப்பை உருவாக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியவர், திறன் தக்கவைப்பில் அல்லாமல், திறன் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். உங்களிடம் மூலதனம் குறைவாக இருந்தால், வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பை எப்படி உயர்த்தலாம் என பார்க்க வேண்டும். நம் தொழில்முனைவோர், குழுவுக்கு எப்போதும் மூலதனம் இருக்கும்,” என்றார்.


அடிப்படையான அம்சங்கள் பின்னே சென்றால் மற்றவை தானாக வரும் என்றார்.

“பணியில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப என தினசரி நிகழ்ச்சி நிரல் மாறுகிறது. யோகா, மற்றும் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறேன். தூக்கம் மற்றும் குடும்பத்திற்கான நேரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வான் | தமிழில்- சைபர்சிம்மன்