‘ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு அதன் நிறுவனர்கள் தான் முக்கியம்’ - முதலிட்டாளர் குணால் பஹ்ல்!
யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் விழாவில் பேசிய ஸ்னாப்டீல் நிறுவனர் மற்றும் டைட்டன் கேப்பிடல் முதலீட்டாளர் குணால் பஹ்ல், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் தாம் எப்படி முதலிட்டு செய்கிறார்கள் என பேசினார்.
TechSparks நிகழ்வின் இரண்டாம் நாளில் Snapdeal நிறுவனர் குணால் பஹ்ல் பல் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இவர் தொழில்முனைவோராக மட்டுமல்லாமல் தற்போது முதலீட்டாளராகவும் இருக்கிறார். இவரின் ‘டைட்டன் கேபிடல்’ மூலமாக கடந்த 11 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்’களில் முதலீடு செய்திருக்கிறார். இவருடன் யுவர் ஸ்டோரி தலைமைச் செயல் அதிகாரி ஷ்ரத்தா சர்மா உரையாற்றினார்.
தொழில்முனைவராக் இருந்த நீங்கள் ஏன் ஸ்டார்ட்-அப்’களில் முதலீடு செய்ய முடிவெடுத்தீர்கள் என்னும் கேள்விக்கு, விரிவான பதில் அளித்தார் குணால்.
“11 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதலீட்டை தொடங்கும் போது இணைய பயன்பாட்டாளர்கள் 5 மில்லியன் என்னும் அளவில் மட்டுமே இருக்ந்தனர். இப்போது பல கோடி பயனாளர்கள் இருக்கிறார்கள். அதனால் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதை உணர்ந்தேன்.
“நாங்கள் தொழில் தொடங்கும்போது பெரிய அளவிலான சூழல் இல்லை. தற்போது சூழல் மேம்பட்டிருப்பதால் நிறுவனர்களுக்கு உதவியாக இருக்கிறேன். எனக்குக் கிடைத்து எல்லாம் இந்த ஸ்டார்ட் அப் சூழல் மூலமாகவே கிடைத்தது. அதனை அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்,” என்றார்.
எந்த அடிப்படையில் முதலீட்டை தேர்வு செய்கிறீர்கள் என்னும் கேள்விக்கு,
‘முதலில் நிறுவனர்கள்தான் முக்கியம். ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு நிறுவனர்கள்தான் முக்கியம். அதனால் அவர்களின் தரம் முக்கியம் அதனைத் தொடர்ந்து ஊழியர்களின் தரம் முக்கியம். அடுத்ததாக ஒரு ஸ்டார்ட் அப் ஒரு பெரிய பிரச்சினையை தீர்ப்பதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் புதிய கேட்டகரியை உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதை விட முக்கியம் யூனிட் எகனாமிக்ஸில் பாசிட்டிவாக இருக்க வேண்டும். அதாவது, நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கு காலதாமதம் ஆகும். ஆனால் ஒரு வியாபாரத்தை நஷ்டத்தில் செய்யக்கூடாது.”
மேலும், எங்களுக்கு எந்த சார்பும் கிடையாது. வாய்ப்பு இருக்கும் அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்வோம் என்று கூறினார்.
முன்பெல்லாம் முதலீட்டாளர்கள் மட்டுமே இருந்தார்கள் ஆனால் தற்போது தொழில்முனைவில் இருந்தவர்கள் முதலீட்டாளராக மாறி இருக்கிறார்கள். இதன் சாதகம் என்ன? எனும் கேள்விக்கு,
தற்போது என்னை போல பலரும் வந்திருக்கிறார்கள். நாங்கள் முதலீட்டுக்கு வரும்போது நீண்ட கால முதலீட்டில் முதலீடு செய்ய வருகிறோம். தவிர தொழில்முனைவோராக இருந்து வந்திருப்பதால் அதில் உள்ள சிக்கல்கள் தெரியும்.
மேலும், எங்களிடம் ஒரு நெட்வொர்க் இருக்கிறது, நாங்கள் முதலீடு செய்ய இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தேவையான உதவியை நாங்கள் முதலீடு செய்த மற்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும், என்றார்.
”தவிர நாம் முதலீட்டாளராக இருப்பதால் பல கனவுகளை நம்மால காண முடியும். இறுதியாக நிறுவனர்களால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்,” என்று கூறினார்.
வளர்ச்சி மற்றும் லாபம் இதில் எது முக்கியம், என்னும் கேள்விக்கு லாபம் செய்யக் கூடாது என்னும் நோக்கத்தில் யாரும் நிறுவனம் தொடங்குவதில்லை. ஆனால், வளர்ச்சி மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்காது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல யூனிட் எகாமிக்ஸில் சாதகமாக இருந்தால் வளர்ச்சி என்பது முக்கியம். ஆனால் யூனிட் எகாமிக்ஸில் நெகடிட்டிவாக இருந்தால் வளர்ச்சியால் உங்களுக்கு பிரச்சினை அதிகரிக்கும்.
“வளர்ச்சி முக்கியம். ஆனால் யூனிட் எகானமிக்ஸ் எப்படி இருக்கிறது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்,” என்று குணால் கூறினார்.
இதுவரைக்கும் வென்ச்சர் கேபிடல் முதலீடு என்றாலே வெளிநாட்டில் இருந்துதான் வருகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகரிக்க மாட்டார்களா என்னும் கேள்விக்கு, இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் இனி, இந்த நிலைமை மாறும், எங்களைப் போல பல முதலீட்டாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
உங்களை நிறுவனர்கள் எப்படி தொடர்புகொள்வது என்னும் கேள்விக்கு, மெயில் மூலமே என்னை தொடர்பு கொள்ள முடியும். பெரும்பாலான சமயங்களில் மெயில் மூலம் ரிப்ளை கிடைக்கும். ஏற்கெனவே சொன்னதுபோல இதுவரை எங்களுக்குக் கிடைத்தது எல்லாம் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம் மூலமாகதான். அதனை முடிந்தவரை திருப்பி கொடுப்போம், என குணால் கூறினார்.
'Byju's காணாமல் போகும் என்றவர்களுக்கு நான் சொல்வது சான்சே இல்லை...’ - TechSparks-இல் பைஜு ரவீந்திரன்!