[TechSparks 2020] ‘மாற்றம் ஏற்படுத்தும் யுவர்ஸ்டோரி-க்கு பாராட்டு’ - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்!
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நாட்டின் முன்னெடுப்பில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல், நவீன கால பொருளாதாரம் ஆகியவற்றின் பங்களிப்பை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முதல் முறையாக மெய்நிகர் வடிவில் நடைபெற்று வரும் யுவர்ஸ்டோரியின் முக்கிய நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகளின் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முக்கிய உரையாற்றினார்.
இது டெக்ஸ்பார்க்ஸ் 11-வது ஆண்டு நிகழ்வு. கிட்டத்தட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 70,000 பேர் இந்நிகழ்வில் பங்கேற்க பதிவுசெய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா தலைமையில் இயங்கும் யுவர்ஸ்டோரி நிறுவனத்தின் கதையே இதில் வெளிப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்று உலகளவில் பங்கேற்ற பார்வையாளர்களிடம் குறிப்பிட்டார்.
'உலகிற்காக இந்தியாவில் உருவாக்குவது’ என்கிற மையக்கருத்தை வலியுறுத்தும் டெக்ஸ்பார்க்ஸ் 2020 ஐந்து நாள் நிகழ்வு அக்டோபர் மாதம் 26-ம் தேதி, திங்கட்கிழமை நேரலையில் தொடங்கியது. இந்தியாவில் இருந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து பேச்சாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உலகளவில் 70,000 பயனர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில்முனைவோர், வணிகத் தலைவர்கள், புதுமை படைப்பவர்கள் போன்றோரே இந்நிகழ்வில் அதிகம் பங்கேற்றனர்.
“தொழில்நுட்பத் துறை மக்களுக்கு சக்தியளிக்கிறது; புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிக்கிறது; இவர்கள் தங்கள் கதையை எடுத்துரைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஷ்ரத்தா ஷர்மா தனது தளத்திற்கு ‘யுவர்ஸ்டோரி’ என்று மிகச்சரியாக பெயரிட்டுள்ளது பாராட்டிற்குரியது. யுவர்ஸ்டோரி சாதனை படைப்பவர்கள் தங்கள் சாதனையை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டத் உதவும் தளமாக விளங்குகிறது. எனவே யுவர்ஸ்டோரியும் இந்த நிகழ்வும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நாட்டின் முன்னெடுப்பில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல், நவீன கால பொருளாதாரம் ஆகியவற்றின் பங்களிப்பை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் தொழில்நுட்ப ரீதியாக உள்நாட்டில் மேம்படுவதன் அவசியத்தையும் புதுமை படைப்பதற்கான அவசியம் நிலவுவதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் இளம் சமூகத்தினர் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகவும் உலகளவில் சூப்பர்பவராக நாடு முன்னேறத் தேவையான உந்துதலை ஸ்டார்ட் அப் சமூகம் வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“என்னுடைய உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் பெரும்பாலான நண்பர்கள்; இளைஞர்கள். நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மாவும் இளம் வயதைச் சேர்ந்தவர். இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாக சாத்தியமுள்ளது; உலக பொருளாதாரத்திற்கு இணையாக சிறப்பிக்க சாத்தியமுள்ளது; உலகளவிலான விநியோகச் சங்கிலி அமைப்பில் வலுவாக பங்களிக்கும் திறன் கொண்டது. இதுவே எங்கள் விருப்பம்,” என்றார்.
யுவர்ஸ்டோரி தளமும் அதன் முக்கிய நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வும் கொண்டு சேர்க்கும் மாற்றத்தை மத்திய அமைச்சர் தனது உரையில் அங்கீகரித்தார். இந்தியாவில் உள்ள புத்தாக்க சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர்கள், மாற்றத்தை ஏற்படுத்துவோர்கள் போன்றோரிடையே இந்நிகழ்வு தூண்டுதலை ஏற்படுத்தி மில்லியன் கணக்கான இந்தியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
“ஆர்மமுள்ள பலர் தீர்வுகளை உருவாக்குவதற்கான உந்துதலை டெக்ஸ்பார்க்ஸ் நிச்சயம் வழங்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நவீன பொருளாதாரத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, ரோபோடிக்ஸ், டேட்டா கிளீனிங் மற்றும் ரீஃபைனிங் போன்றவற்றை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள தகுதியான நாடு இந்தியா,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“இந்தியாவின் டிஜிட்டல் கதை, ஸ்டார்ட் அப் அதை மிகப்பெரிய நகரங்களில் மட்டுமல்லாது சிறு கிராமம் வரை சென்றடையவேண்டும். எனவே Chunauti Scheme என்கிற திடத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். டிஜிட்டல் கல்வி, விவசாயம், ஹெல்த்கேர், திறன் பயிற்சி, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள புத்தாக்க தீர்வுகள் அங்கீகரிக்கப்பட்டு 2.5 மில்லியன் ரூபாய் அளவிற்கு ஊக்கமளிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் 1.5 மில்லியன் இணைப்புகள் ஏற்படவும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவும் ஸ்டார்ட் அப்கள் 1 பில்லியனுக்கும் கூடுதலாக நிதி திரட்டவும் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வு உதவியுள்ளது.
மத்திய அமைச்சர் நிறைவுக் கருத்தாக,
“அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஷ்ரத்தா ஷர்மாவின் கதையின் சக்தி வாய்ந்த கதைதான் யுவர்ஸ்டோரி. இந்த டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வு அத்தகைய வலுவான உலகளாவிய தளமாக உருவாகியிருப்பதே இதை உறுதிப்படுத்துகிறது,” என்றார்.
தமிழில்: ஸ்ரீவித்யா