இந்திய பட்ஜெட் 2023 - துறை ஒதுக்கீடுகள், புதிய அறிவிப்புகள் என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து கொண்டிருக்கும் பட்ஜெட்டின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ:
மத்திய பட்ஜெட் 2023
2023- 2024ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2019ம் ஆண்டு முதல் 5வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பெண் நிதியமைச்சராவார் நிர்மலா.
2021ம் ஆண்டில் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தது போல இந்த பட்ஜெட் உரையை முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட லெட்ஜர் கணக்கு வடிவத்திலான பையில் டேப்லெட்டை எடுத்து வந்தார். மத்திய அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த முதல் பட்ஜெட்டானது 100வது சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கான ப்ளுபிரிண்ட்டாக இருக்கும். சவால்கள் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் சரியான வளர்ச்சியில் இருக்கிறது.
இந்த ஆண்டிற்கான நாட்டின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பெண்கள், பழங்குடியின மக்கள் என அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
துறைக்கான நிதிகள் எவ்வளவு?
- ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
- நிதித்துறைக்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்குடு.
- பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15,000 கோடி நிதி அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு.
- போக்குவரத்து திட்டங்களை மேம்படுத்த ரூ.75,000 கோடி நிதி, வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர் நலனுக்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி.
- ரூ.7,000 கோடி நிதியில் இ-நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.
- சிறு,குறுநடுத்த தொழில்களுக்கு ரூ.9,000 கோடி கடன் உத்தரவாதம்.
வளர்ச்சித் திட்டங்கள்
- நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
- தேசிய அளவில் குழந்தைகள், இளைஞர்கள் பயிலும் வகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.
- 157 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.
- நாடு முழுவதும் சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கப்படும்.
- கம்பு, சோளம், திணை உள்ளிட்ட சிறுதானிய வகைகள் உற்பத்திக்கு முன்னுரிமை.
- வணிக அடையாள அட்டையாக பாண் எண் பயன்படுத்தப்படும்.
- 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- 3 ஆண்டுகளுக்கு 47 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
- ஒருலட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்க திட்டம்.
- 5 ஜி சேவையை மேம்படுத்த நாட்டில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
- டிஜிட்டல் பணபரிவர்த்தனை 72% உயர்வு.
'5வது இடத்துக்கு முன்னேறிய இந்திய பொருளாதாரம்' - பட்ஜெட் தாக்கல் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!