யோகா, உடற்பயிற்சி, மன ஆரோக்கியம் - மக்களின் வாழ்வியலை முறையாக்கும் ஐஐடி பட்டதாரி செளரப் போத்ரா!
எண்ணற்ற மனிதர்களின் நியூ இயர் ரெசலியூஷன்களில் முதன்மை இடத்தைப்பிடிப்பது ஃபிட்னஸ். அதை அடைய உடற்பயிற்சியை அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிட உதவுகிறது 'ஹபில்ட்' எனும் உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்தும் வெல்னஸ் ஸ்டார்ட்அப்.
எண்ணற்ற மனிதர்களின் நியூ இயர் ரெசலியூஷன்களில் முதன்மை இடத்தைப்பிடிப்பது பிட்னஸ். தினமும் உடற்பயிற்சி செய்து இந்தாண்டுக்குள் ஜிம் பாடி ஆகி காட்டுகிறேன் என்பது பலரது சவால். ஆனால், அவ்வெண்ணம் ஜனவரி மாதம் முடியும் வரை கூட இருப்பதில்லை. ஏனெனில் புதிதாக தொடங்கிய பழக்கத்தினை வழக்கமாக்கி கொள்வதில் ஏற்படும் சிரமம்.
அவர்களை வழிநடத்தி கோலினை அடைய உடற்பயிற்சியை அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிட உதவுகிறது 'ஹபில்ட்' (
) எனும் உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வெல்னஸ் ஸ்டார்ட்அப். அதன் நிறுவனர் செளரப் போத்ரா.மகாராஷ்டிராவின் சிறிய நகரமான நாக்பூரில் வளர்ந்த செளரப் போத்ரா, அவரது கனவுக் கல்லூரியான ஐஐடி- (பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்) (IIT BHU) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். பட்டம் பெற்றபின் அவருடைய குடும்பத் தொழிலில் இணைந்து, தொழில் வளர்ச்சியில் உதவிட எண்ணினார்.
ஆனால், அவருக்குள் இருந்த தொழில்முனைவு ஆசை அவரை வேறு சிந்தனைக்குள் மூழ்கடித்தது. செளரப்பின் ஆர்வம் யோகாவில் இருந்தது. யோகா கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த செளரப், கல்லுாரி நாட்களிலிருந்தே சகமாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுப்பது வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
அப்போது, மக்கள் உடற்பயிற்சியினை நாள் தவறாமல் கடைபிடிக்கவே போராடுகின்றனர் என்பதை உணர்ந்தார். இச்சிந்தனையின் நீட்சியும் அவரது தொழில்முனைவு கனவும் ஒன்றுசேர 'ஹபில்ட்' எனும் உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்பை தொடங்கினார்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் செளரப் போத்ரா மற்றும் அவரது நண்பர்களும் முன்னாள் ஐஐடி மாணவர்களான திரிஷாலா போத்ரா மற்றும் அன்ஷுல் அகர்வால் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஆரோக்கிய தளமான Habuild, யோகா போன்ற நல்ல பழக்கங்களை வளர்த்து, உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுவதற்கு இத்தளம் உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. ஏற்கனவே பல வீட்டு வேலைகளைச் செய்கிறோம், வேலை செய்து மிகவும் சோர்வாக இருக்கிறேன். இந்த காரணங்களே அவர்களது, வழக்கமான உடற்பயிற்சிகளை கடைப்பிடித்திலிருந்து மக்களைத் தடுக்கின்றது. இதை உணர்ந்தபோதே ஹபில்டை தொடங்குவதற்கான எண்ணமும் உருவாகியது.
"தற்போதைய சூழலும், வயதும் நம்மை உட்கார்ந்த வாழ்க்கை முறையை வாழ கட்டாயப்படுத்துகிறது. ஆனால், நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி, வாழ்க்கை முறை மாற்றங்களை உணர்வுபூர்வமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது மிக அவசியம். ஏனெனில், அதன் மூலமே, நாம் சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்," என்கிறார் செளரப்.
இந்த ஸ்டார்ட்அப் ஆனது மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வதற்கான சமூகம் சார்ந்த திட்டங்களை வழங்குகிறது. நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மனஅமைதிக்கான பயிற்சிகள், ஜூஸ் விரதம், குடல் சுத்தப்படுத்துதல், சமையலறை தோட்டம், மற்றும் மர்மா ஹீலிங் போன்ற பழக்கங்களை மனிதர்களின் வாழ்வின் அன்றாட வழக்கமாக்கி ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ள துாண்டுகிறது.
யூடியுப் மற்றும் ஜூம் செயலியில் அதன் வகுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் இணையதளமானது பயனர்கள் கையாள்வதற்கு ஏதுவாக எளிமையான முறையில் வடிமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழியில் அதன் சேவையை வழங்கி வருகிறது. ரூ 3999க்கு 12-மாத திட்டம், ரூ.2999க்கு 6 மாதங்கள் மற்றும் ரூ1999க்கு 3 மாத திட்டம் என பல சப்ஸ்கிரைப் திட்டங்களை கொண்டுள்ளது.
பெரு நகரங்கள் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களையும் ஹபில்ட் சென்றடைந்துள்ளது.தொடக்கத்தில் வெறும் மூன்று பயனர்களுடன் தொடங்கப்பட்ட ஹபில்டில் இன்று அமெரிக்கா, கனடா, துபாய் மற்றும் சிங்கப்பூர் உட்பட 38 நாடுகளிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதில், 85% பயனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். இந்த வளர்ச்சியானது வாய்வழி விளம்பரம் மற்றும் பரிந்துரைகள் மூலம் நடந்தது என்கிறார் செளரப்.
"எங்களுடைய முதன்மையான விளம்பரம் எங்களது பயனர்களே. ஹபில்டில் இணைந்து பயணம் செய்த அனுபவத்தை பயனர்களை அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் தெரிவிக்க வலியுறுத்துவோம். இதன் மூலம் அவர்கள் கூடுதல் நாட்கள் உறுப்பினராக தொடர்வர்," என்று யுவர் ஸ்டோரியிடம் தெரிவித்தார் செளரப்.
ஃபிட்னஸ் ரெசலியூஷன்களை பாதியிலே கைவிடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஜனவரி 2 முதல் 22 வரை, 92 நாடுகளில் இருந்து 4.5 லட்சம் பயனர்களை இணைந்து இணைய வழியில் ஒரு நிகழ்வில் ஒருங்கிணைத்தது. அதாவது, காலை 6:30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை மக்கள் அவர்களது வீடுகளில் இருந்தே பல்வேறு ஆசனங்கள் அல்லது யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் உடற்பயிற்சியில் ஒருவொருக்கு ஒருவர் உள்ள ஈடுபாடு, அவர்களது பிட்னஸ் இலக்குகளை அறிந்துகொண்டு, அதன்மூலம் ஈர்க்கப்பட்டு இலக்கினை பாதியிலே கைவிடுவதை தவிர்ப்பதே இந்நிகழ்வின் இலக்காகும்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி, இணையத்தில் ஒரே அமர்வில் 2,46,252 பேர் இணைந்து பங்கேற்று யோகாவை மேற்கொண்டு உலகிலே ஒரே அமர்வில் அதிக பேர் பங்கேற்ற யோகா இணையநிகழ்வு என்ற உலக கின்னஸ் சாதனையை படைத்தது.
எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னோக்கி நகர்ந்து செல்லும் ஹபில்ட், குழந்தைகளுக்கான யோகா திட்டங்களையும், நீரிழிவு, பிசிஓடீ மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடற்பயிற்சி திட்டங்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழில்: ஜெயஸ்ரீ
12,300 அடி உயரத்தில் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ள 78 வயது யோகா ஆசிரியை!