இன்ஸ்டாகிராமில் பிழை கண்டுபிடித்த இந்திய மாணவருக்கு ரூ.22 லட்சம் பரிசு அளித்த ஃபேஸ்புக்!
மாணவருக்கு அடித்த லக்!
நீங்கள் சமூக ஊடகங்களில் இருந்தால், உங்கள் கணக்கின் பாதுகாப்பு குறித்து நீங்கள் பெரும்பாலும் கவலைப்படுவீர்கள். நீங்கள் உலகத்திலிருந்து மறைக்க விரும்பும் புகைப்படங்கள் அல்லது பிற விவரங்கள் குறித்து, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக கவலைக்கொள்வோம்.
ஆனால் ஒரு இந்திய டெவலப்பலர் இன்ஸ்டாகிராமில் இருந்த இதுபோன்ற பயத்தை போக்கி பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்த உதவியாக இருந்துள்ளார். அவர் பெயர் மயூர் ஃபார்டேட். மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரைச் சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவரான இவர், சி++ மற்றும் பைதான் மொழிகளில் நல்ல திறன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தான் ஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் தளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பிழைகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. இந்த போட்டியில் மாணவர் மயூரும் கலந்து கொண்ட நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள பிழையைக் கண்டார்.
அவர் கண்டுபிடித்த பிழை, இன்ஸ்டாகிராமில் பிரைவட் கணக்கு வைத்திருந்தாலும் மீடியா ஆப்ஷன் மூலம் ஒரு பயனரைப் பின்தொடராமல், யாருடைய புகைப்படங்கள், ஸ்டோரீஸ் ஆகியவற்றை பார்க்க முடியும் என்பது தான். இந்த பிழையை கடந்த மாதம் ஏப்ரல் 16-ம் தேதி ஃபேஸ்புக்கிற்கு மயூர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்பின்னர், சில நாட்களில் மயூரை தொடர்புகொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், பிழை தொடர்பாக கூடுதல் தகவல்களைக் கேட்க, மயூரும் தொழில்நுட்ப ரீதியான தகவல்களை அனுப்பிவைத்துள்ளார். இதன் பின்னர்,
ஜூன் 15 அன்று இன்ஸ்டாகிராம் அந்தப் பிழையை சரி செய்துள்ளது. இந்தப் பிழையை கண்டுபிடித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு. அவரது சேவைகளுக்காக ஃபேஸ்புக் நிறுவனம் தனது பக் பவுண்டி திட்டத்திலிருந்து அவருக்கு 30,000 டாலர்கள் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
இந்தப் பரிசுத்தொகையை அறிவித்த பிறகு எதிர்காலத்திலும் இதுபோன்று நிறைய அறிக்கைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் இதுபோன்று பல முறை பக் கண்டுபிடிப்புக்கு பரிசு வழங்கி வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனத்தின் மென்பொருளில் பாதுகாப்புப் பாதிப்புகளை பாதுகாப்பு ஆய்வாளர்கள் பொறுப்புடன் வெளிப்படுத்த ஃபேஸ்புக் ஒரு பிழை பவுண்டி திட்டத்தை வழங்குகிறது.
ஒரு ஆராய்ச்சியாளர்களால் குறியீட்டில் பாதுகாப்பு குறைபாடு அல்லது பிழையை வெற்றிகரமாக நிரூபிக்க முடிந்தால், அவர்கள் கண்டுபிடித்ததற்காக நிறுவனத்தால் அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது.
பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியவும், இந்த பிழைகள் டார்க் வெப்பில் விற்கப்படுவதைத் தடுக்கவும் பல நிறுவனங்கள் இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றன, அங்கு அவை வழக்கமாக பயனர்களைக் குறிவைக்கவும் தரவை அணுகவும் பயன்படுத்தப்படுகின்றன.
தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் | தமிழில்: மலையரசு