கிரெடிட் கார்டு ரிவார்ட் மூலம் ரூ.2 கோடி 17 லட்சம் சம்பாதித்த மனிதர்: எப்படி?
அமெரிக்காவில் வினோதம்!
கிரெடிட்-டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை செலுத்தும்போது ரிவார்ட் எனப்படும் வெகுமதிகள் பயனர்களுக்குக் கொடுக்கப்படுவது வழக்கம். இவற்றின் மூலம், மக்கள் சில நேரங்களில் சில ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இயற்பியல் வல்லுநர், தனது புத்தியால் இந்த வெகுமதிகள் மூலம் ரூ.2 கோடி 17 லட்சம் வரை சம்பாதித்தார் என்ற தகவல் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இந்த தொகையை அவர் மோசடி செய்து ஈட்டினார் என்பது தான் இந்த செய்தியில் உள்ள டுவிஸ்ட்.
Wall Street Journal அறிக்கையின்படி, ”கான்ஸ்டான்டின் அனிகீவ் என்ற அந்த நபர் நீண்ட காலமாக கிரெடிட் கார்டுகள் மூலமாக இப்படி சம்பாதித்து வருகிறார். 2009 முதல் இவ்வாறு செய்து வருகிறார். முதலில் பொழுதுபோக்காக தொடங்கிய இதனை, பின்னர் ஒரு தொழிலாக மாற்றி மில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டத் தொடங்கி இருக்கிறார்.
கான்ஸ்டான்டின் தனது கிரெடிட் கார்டிலிருந்து gift card எனப்படும் ஏராளமான பரிசு அட்டைகளை வாங்கத் தொடங்கி இருக்கிறார். பின்னர் அந்த gift card-ஐ பொருளாக வாங்காமலே, குறியாக்கம் எனப்படும் encash செய்வார். அதாவது மீண்டும் பணமாக மாற்றி பின்னர் அவர் இந்த பணத்தை மீண்டும் தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து அதை வைத்தே கிரெடிட் கார்டு பில் செலுத்துவார். இதனால் அவர் பெற்ற வெகுமதிகள் அவரது வருவாயாக மாறியது.
தான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் லாபம் ஈட்டி இருக்கிறார். உதாரணமாக, அவர் 5 சதவீத அடிப்படையில் 500 அமெரிக்க டாலர் கிஃப்ட் கார்டு ஒன்றை வாங்கும்போது அதற்கு வெகுமதியாக 25 அமெரிக்க டாலர்களை பெறுவார். பின்னர், இந்த வெகுமதியை பணமாக மாற்ற அவர் 6 அமெரிக்க டாலர் செலுத்துவார். இந்த 6 டாலர் போக அவருக்கு 19 அமெரிக்க டாலர் மிச்சமாகும். இது அவரின் லாபமாக மாறியது.
இப்படி, அனிகீவ் 300,000 டாலர் (சுமார் ரூ. 217 மில்லியன்) சம்பாதித்தார். இதற்கிடையில், அவரது வருமான உயர்வைப் பார்த்து, யாரோ ஒருவர் இதை அமெரிக்க வரித் துறைக்குத் தெரிவிக்க, அமெரிக்க அரசு இந்த விவாகரத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் பிறகு, இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தது. அப்போது தான் வாங்கிய கிஃப்ட் கார்டுகளை ஒரு பெட்டியில் எடுத்து கொண்டு நீதிமன்றத்துக்கு வந்த அனிகீவ் தனது வழக்கை தானாகவே வாதிட்டார். மேலும், கிரெடிட் கார்டு நிறுவனங்களால் இது தனக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் வெகுமதிகள். மாறாக இது எனது வருவாய் அல்ல என்று வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டபின், பரிசு அட்டைகள் சொத்து போன்றவை என்றும், பொருட்கள் வாங்கியதற்கு பெறப்பட்ட வெகுமதிகளுக்கு (கிரெடிட் கார்டு வெகுமதிகள்) வரி விதிக்கப்படாது என்றும் நீதிமன்றம் கூறியது.
அதேநேரம், இந்த வழக்கில் வெகுமதிகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் பரிசு அட்டை மீண்டும் பணமாக மாற்றப்பட்டால், அதற்கு வரி விதிக்கப்படும். இந்த வருமானத்திற்கு அவர் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தகவல் உதவி: வால்ஸ்டீர்ட் ஜர்னல் | தொகுப்பு: மலையரசு