Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

11 ஆண்டுகள் கழித்து வேர்க்கடலை வியாபாரியிடம் ரூ.25 கடனை வட்டியுடன் செலுத்திய இளைஞர்!

11 ஆண்டுகளுக்கு முன்பு வேர்க்கடலை வியாபாரியிடம் வாங்கிய ரூ.25 கடனை திரும்ப செலுத்த அமெரிக்க வாழ் இந்திய சகோதரன் தனது சகோதரியுடன் ஆந்திர மாநிலத்திற்கு வந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

11 ஆண்டுகள் கழித்து வேர்க்கடலை வியாபாரியிடம் ரூ.25 கடனை வட்டியுடன் செலுத்திய இளைஞர்!

Tuesday January 04, 2022 , 2 min Read

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்” என்பது வள்ளுவன் வாக்கு அதாவது ஒருவர் தினையளவு உதவி செய்திருந்தாலும், அந்த உதவியின் பயன் அறிந்தவர்கள், அந்த உதவியை பனையளவுக்கு உயர்த்திப் பார்ப்பார்கள் என்பது பொருள். அப்படிப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் தான் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

வேர்க்கடலை வியாபாரிடம் ரூ.25 கடன்:

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் மோகன், இவர் 2010ம் ஆண்டு மகன் நேமானி பிரணவ் மற்றும் மகள் சுஜிதா உடன் யூ கொத்தப்பள்ளி கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்துள்ளார்.

Peanut

தனக்கு வேர்க்கடலை வேண்டுமென சிறுவன் பிரணவ் கேட்டதை அடுத்து, 25 ரூபாய்க்கு வேர்க்கடலை பொட்டலங்களை வாங்கியுள்ளார். ஆனால், வேர்க்கடலையை வாங்கி மகனிடம் கொடுத்த பிறகு தான் மோகனுக்கு தன்னிடம் பணமில்லை என்பது தெரியவந்துள்ளது.


சிறுவன் பிரணவிடம் இருந்து வேர்க்கடலைகளை தந்தை மோகன் திரும்ப வாங்கியுள்ளார். அப்போது குறுக்கிட்ட கடலை வியாபாரி வேதசத்தைய்யா பணம் வேண்டாம் இலவசமாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார். ஆனால் அதனை மறுத்த மோகன் பணத்தை நாளை கொண்டு வருவதாகக் கூறிவிட்டு, கடலை வியாபாரி வேதசத்தைய்யாவுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.


மறுநாள் மோகன் குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்ற போது வேதசத்தைய்யா அங்கு வரவில்லை. மோகன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் எனவே, உடனடியாக அவர்கள் அமெரிக்க திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வேதசத்தைய்யாவிற்கான பணத்தை செலுத்த முடியவில்லை.

11 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்:

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வாழ் இந்தியர் மோகனின் மகனான பிரணவ், தனது சகோதரி சுஜிதாவுடன் விடுமுறைக்கு காக்கிநாடாவிற்கு வந்துள்ளார். தனது தந்தை கடலை வியாபாரி வேதசத்தையாவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த விரும்பினர்.

இதற்காக கடற்கரையில் வேதசத்தைய்யாவை தேடினார். ஆனால், அவர் கிடைக்கவில்லை. எனவே பிரணவ் தனது உறவினரும் காக்கி நாடா எல்.ஏ.வுமான சந்திரசேகர ரெட்டியின் உதவியை நாடினார்.

panut
மேலும், கடலை வியாபாரி வேதசத்தையாவுடன் 11 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் எடுத்துக்கொண்ட போட்டோவையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வேதசத்தைய்யா பற்றி யாருக்காவது தெரிந்திருந்தால் தனக்கு தெரிவிக்கும் படி பதிவிட்டார்.

அதில், பெரும்பாலானோர் வேதசத்தைய்யா இறந்துவிட்டார் எனத் தெரிவித்தனர். சோசியல் மீடியா கைவிட்ட நிலையில், பிரணவ் உறவினரான காக்கிநாடா எம்.எல்.ஏ.அவரைக் கைவிடவில்லை. வேதசத்தைய்யா மனைவியை எம்.எல்.ஏ. தனது வீட்டிற்கு வரவழைத்தார்.


அவரிடம் பிரணவ்,

தான் 11 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.25-க்கு வட்டியுடன் சேர்த்து ரூ.25 ஆயிரமாக திருப்பி கொடுத்தார். தனக்கு சிறிய உதவியை வேதசத்தைய்யா செய்திருந்தாலும், அதனை நினைவில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் கடனைத் திரும்பச்செலுத்திய பிரணவிற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொகுப்பு: கனிமொழி