'11 மார்க்கில் 10 வருட கடும் உழைப்பு; 6 முறை முயற்சி பறிபோனதே...’ - ரஜத் சாம்பியலின் ஐஏஎஸ் கனவு!
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனவர்கள் தங்களது மனக்குமுறல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனவர்கள் தங்களது மனக்குமுறல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த முடிவுகள் மே 30ம் தேதி அன்று வெளியாகின. இதில் சாதனை படைத்த ஏராளமான பெண் மற்றும் ஆண் தேர்வர்கள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாகவே ஊடகங்களிலும், சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
அதேபோல், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு முயன்று வந்த பலரும் சில மதிப்பெண்களில் வாய்ப்பை தவற விட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
அப்படி யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனவர்கள் தங்களது மனக்குமுறல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத தேர்வாளர் ஒருவர், 11 மதிப்பெண்களில் தோல்வியுற்றது தொடர்பான ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜத் சம்பியல் என்பவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த யுபிஎஸ்சி தேர்வோடு சேர்த்து 6வது முறையாக தோல்வியை சந்தித்திருக்கிறார். தனது 6வது முயற்சியில் நேர்காணலில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தோல்வி அடைந்தை தனது மதிப்பெண் சான்றிதழுடன் பதிவிட்டுள்ளார். அதில், தனது ஐஏஎஸ் வாய்ப்பு 11 மதிப்பெண்களில் தவறிப்போனதாக பதிவிட்டுள்ளார்.
"10 வருட கடின உழைப்பு சாம்பாலாகிப் போனது... இருப்பினும் தொடர்ந்து முயல்கிறேன். எனது கடைசி முயற்சியில், நேர்காணலில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நேற்று நான் உடைத்து போனேன். 11 மதிப்பெண்களில் வாய்ப்பை தவறவிட்டேன்," என்று எனப் பதிவிட்டுள்ளார்.
இதுவரை 6 முறை முயற்சித்துள்ள ரஜத் சம்பியல், 3 முறை பிரிலிம்ஸ் தேர்விலும், இரண்டு முறை மெயின் தேர்விலும் தோல்வியடைந்துள்ளார். அவர் பதிவிட்ட மார்க் சீட்டின்படி, முதல் தாளில் 112, 2வது தாளில் 84, 3வது தாளில் 110, 4வது தாளில் 87, 5வது தாளில் 93, 6வது தாளில் 169, 7வது தாளில் 138 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
எழுத்துத் தேர்வில் மொத்தம் 793 மதிப்பெண்கள் பெற்றுள்ள ரஜத், ஆளுமைத் தேர்வில் 149 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இருப்பினும் நேர்காணலில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் வாய்ப்பு கை நழுவியுள்ளது.
ரஜத் சம்பியலின் இந்த ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என இவ்வளவு வெறியா? என பலரும் அவரை பாராட்டியுள்ளனர். சிலர் நிச்சயம் அவரது கனவை கைவிடாமல் தொடர்ந்து முயன்று சாதிக்க வேண்டுமென ஊக்கப்படுத்தியுள்ளனர்.
தொகுப்பு - கனிமொழி