குறைந்த செலவு தொழில் நுட்பங்களை உருவாக்க இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு கழகத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கான பிரதேயக தேவைகளை நிறைவேற்றக் கூடிய குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் பிரத்யேகமான தேவைகளை நிறைவேற்றி, நாட்டை வளர்ச்சிப்பாதையில் வேகமாக அழைத்துசெல்லக்கூடிய குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களை உருவாக்குமாறு விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புனாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு கழக (ஐ.ஐஎஸ்.இ.ஆர்) விஞ்ஞானிகளுடன் உரையாடும் போது மோடி இவ்வாறு கூறியதாக, பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
புதிய பொருட்கள் துவங்கி, தூய்மை எரிசக்திக்கான சாதனங்கள் முதல் விவசாய உயிரி நுட்பம் வரை பலவிதமான நுட்பங்கள் தொடர்பான காட்சி விளக்கத்தை விஞ்ஞானிகள் பிரதமர் முன் அளித்தனர்.
மாலிகியூலர் பயோலஜி, பருவநிலை ஆய்வு, கணிதவியல் நிதி ஆய்வு உள்ளிட்ட தலைப்புகள் தொடர்பாகவும் காட்சி விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
“இந்தியாவுக்கு பிரத்யேகமான தேவைகளை நிறைவேற்றி, நாட்டை வளர்ச்சிப்பாதையில் வேகமாக அழைத்துசெல்லக்கூடிய குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களை உருவாக்குமாறு விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, புனாவில் உள்ள ஐ.ஐ.எஸ்.இ.ஆர் வளாகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார். இங்குள்ள அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டரான பரம் பிரம்மாவையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர், ஆயுதப்படையினர் தினத்தை முன்னிட்டு, ராணுவத்தினர் குடும்ப நலத்திற்கான நிதி திரட்டும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். தனது ஊதியத்தில் இருந்து பணத்தை நன்கொடையாக அளித்த பிரதமர், 2016ம் ஆண்டு உயிர் தியாகம் செய்த ராணுவவீரர் குனால் கோஸ்வி மகளிடம் அதை வழங்கினார். குனால் கோஸ்விம், ஜம்மூ அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
“ஆயுதப்படையினர் கொடி தினத்தன்று நம்முடைய ராணுவத்தினர் மற்றும் அவர்கள் குடும்பங்களின் வீரத்திற்கு தலை வணங்குவோம். இவர்கள் குடும்ப நலனுக்கு நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்