‘ஸ்டார்ட்-அப்களுக்காக பிரத்யேக வங்கிக் கிளை’ - சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறப்பு!
சென்னை அண்ணாசாலையில் இந்த பிரத்யேகக் கிளையை வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா துவங்கி வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் ஆர்வலர்களும் தொழில்முனைவோர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் ஸ்டார்ட்-அப்களுக்காக புதிய பிரத்தியேகக் கிளையைத் திறந்தது. இதன் பிரதான நோக்கம் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதிச்சேவைகளையும் வலுவான ஆதரவையும் வழங்கவுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் இந்த பிரத்யேகக் கிளையை வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா துவங்கி வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் ஆர்வலர்களும் தொழில்முனைவோர்களும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இன்றைய தேதியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் அதன் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி அதற்குரிய வகையிலான நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் கிடைக்கச் செய்வது அவசியம்," என்றார்.
![IOB Start-up branch](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/StartUpBranchPic2-1717741579133.jpg?fm=png&auto=format&w=800)
முதல் நாளன்றே ஐஓபி ஸ்டார்ட்-அப் “நடப்புக் கணக்கு” மற்றும் கடன் திட்டமான “ஐஓபி பிரகதி” என்ற திட்டத்தை ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியளிப்பதற்காக தொடங்கப்பட்டது. முதல்நாளே 35 ஸ்டார்ட்-அப்கள் இதில் சேர்க்கப்பட்டன.
துவங்கி வைத்துப் பேசிய வங்கியின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ. அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா,
“நமது பொருளாதாரத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஸ்டார்ட் அப்கள் முக்கியமாகும். இந்த பிரத்யேக கிளையை நிறுவுவதன் மூலம், ஐஓபி ஸ்டார்ட் அப்களின் நிதித் தடைகளை அகற்றுவதையும், தொழில்முனைவோர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சி இந்தியாவில் துடிப்பான ஸ்டார்ட்-அப் சூழலை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த ஸ்டார்ட்-அப் கிளையின் துவக்கம் எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்,” என்றார்.
![IOB Start up branch](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Imageshea-1718007626099.jpg?fm=png&auto=format)
ஸ்டார்ட் அப்களுக்கான ஐஓபியின் இந்தப் பிரத்யேகக் கிளை சென்னையில் உள்ள பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தக் கூட்டாண்மைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களை சென்றடைய முடியும். அவர்களின் தொழில் திட்டங்களில் நிதி ஆதாரங்களை வலுப்படுத்த முடியும்.
இது முதல் கிளைதான், ஆனால் இது மட்டுமல்ல நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் மேலும் ஐந்து ஸ்டார்ட்-அப் பிரத்யேகக் கிளைகளைத் திறக்க வங்கி உத்தேசித்துள்ளது.