Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவில் MSME-களுக்கு அதிகக் கடன் அளித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றது!

2021 - 2022ம் நிதியாண்டின் மொத்த மூலதன பங்களிப்பில் 64 சதவீத மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் கொண்டுள்ளன.

இந்தியாவில் MSME-களுக்கு அதிகக் கடன் அளித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றது!

Monday June 27, 2022 , 2 min Read

2021 - 2022ம் நிதியாண்டின் எம்.எஸ்.எம்.இ-யின் மொத்த மூலதன பங்களிப்பில் 64 சதவீத மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் கொண்டுள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

CRIF High Mark என்ற கடன் தகவல் நிறுவனத்தின் தரவுகளின் படி, FY22 இல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) கடன் வழங்குதலில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து வந்தவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் 10 மாநிலங்கள் 90 சதவீத மூலதன மதிப்பைக் கொண்டுள்ளன, அதே சமயம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள், நிதியாண்டின் மொத்த மூல மதிப்பில் 64 சதவீதத்தை உருவாக்கியுள்ளதாக CRIF ஹை மார்க் வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக MSME துறையை கொள்கை வகுப்பாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், தொற்றுநோய்க்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் உட்பட பல முன்முயற்சிகள் மூலம் இத்துறையில் நிதியை ஆழமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
MSME

தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்துடன் இணைந்து, முதல் மூன்று மாநிலங்களில் மஹாராஷ்டிராவும் இடம்பெற்றுள்ளது, மேலும் இவை மூன்றும் MSME கடன் வழங்குவதில் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ளன என தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி, MSME முன்னேற்றங்களுக்கான முதல் ஐந்து நகரங்களில் மும்பை, மும்பை புறநகர், சென்னை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகியவை உள்ளன. மேலும் இவற்றின் FY22இல் மொத்த மூல மதிப்பில் 56 சதவிகிதம் ஆகும்.

தொகுதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், முதல் ஐந்து மாவட்டங்கள் பெங்களூரு, மும்பை, புனே, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகும். இந்த பிரிவில் கடன் வழங்குபவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் கண்ணோட்டத்தில், கடன்-இழப்புகள் அதிகம் இருக்கும் மாநிலங்களாக குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளன, 1.7 சதவீத முன்பணங்கள் 180 நாட்களுக்கும் மேலாக செலுத்தப்படாமல் உள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ​​MSME களுக்கான ஒட்டுமொத்த விநியோகம் FY22 இல் ஐந்து சதவீதம் அதிகரித்து ரூ.37.29 லட்சம் கோடியாக இருந்தது, ஆனால், இது FY20 இல் தொழில்துறையால் அடையப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

MSME கடனின் சராசரி டிக்கெட் அளவு FY22 இல் 72.4 லட்சமாக உள்ளது. CRIF High Mark இன் MD மற்றும் CEO நவீன் சாந்தனி கூறுகையில்,

“எம்எஸ்எம்இ-கள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன. மேலும், 2022ஆம் ஆண்டு எம்எஸ்எம்இ தினத்தைக் கொண்டாடும் வேளையில், இந்தப் பிரிவினருக்கான முக்கியக் கடன் போக்குகளை ஆராய்வதே எங்கள் தரவுகளின் நோக்கமாகும். எம்எஸ்எம்இகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் முந்தையதை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. தொற்றுநோய் அளவுகள், கடன் வழங்கும் சமூகம் இந்தத் துறையின் பின்னடைவு மற்றும் மீள்வளர்ச்சிக்கு தீவிரமாக ஆதரவளிக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். சிறு வணிகங்களுக்கான கடன், சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் வகையில் சிறந்த தரவு மற்றும் நுண்ணறிவுகளை நாங்கள் தொடர்ந்து வெளியிடுவோம்," எனத் தெரிவித்துள்ளார்.

சிறிய கடன் வாங்குபவர்கள் பிரிவு 28.5 சதவிகிதம் மூலமும், 26.2 சதவிகிதம் முத்ரா பிரிவும் 2022 நிதியாண்டில் மூல மதிப்பின்படி அதிக சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.

தகவல் உதவி - PTI | தொகுப்பு: கனிமொழி