ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்ல... Shaadi.com-ல் பெண் வீட்டார் அதிகம் தேடிய வார்த்தை என்ன தெரியுமா?
வரன் தேடும் ஆன்லைன் தளமான Shaadi.com-யில் அதிகம் தேடப்படும் வார்த்தை குறித்து மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளது அதிக கவனம் ஈர்த்துள்ளது.
வரன் தேடும் ஆன்லைன் தளமான Shaadi.com-இல் பெண் வீட்டார் அதிகம் தேடும் வார்த்தை குறித்து மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளது அதிக கவனம் ஈர்த்துள்ளது.
90’ஸ் கிட்ஸ் மாப்பிள்ளைகள் பலரும் வரன் கிடைக்காமல் ஆன்லைன் தளங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் நிலையில், ஈஸியாக திருமணத்திற்கு பெண் கிடைக்கும் வழியை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திருமணச் சந்தையில், அரசு ஊழியராகவோ அல்லது உயர் கல்வி நிறுவனத்தில் பட்டதாரியாகவோ இருப்பது தான் மதிப்புமிக்கது என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அது இனி அப்படி இருக்காது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஷாதி டாட் காம் மேட்ரிமோனியல் தளத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை தேடுகையில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தை,
பெரும்பாலானோர் நினைப்பது போல் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரி அல்ல என்று கிண்டல் செய்துள்ள அவர், அதற்கு பதிலாக, ’ஸ்டார்ட்அப் நிறுவனர்’ (Startup Founders) என்பதே அந்தபிரபலமான முக்கிய வார்த்தை என்றும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா வார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் Shaadi.com இல் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளின் பட்டியலில் 'ஸ்டார்ட்அப் ஊழியர்' (Startup employee) மற்றும் 'ஸ்டார்ட்அப் நிறுவனர்கள்' (Startup founder) ஆகியவை முதலிடத்தில் இருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
"சமீபத்தில் யாரோ என்னிடம் சொன்ன ஒரு விஷயத்தைப் பகிர்வதன் மூலம் முடிக்கிறேன். Shaadi.com-ல் எனக்குக் கிடைத்த நம்பத் தகுந்த தகவல்களின் படி, அந்த தளத்தில் அதிகம் தேடப்படும் முக்கிய வார்த்தை ஐஏஎஸ் அல்ல, ஐபிஎஸ் அல்ல, டாடா நிறுவனமோ அல்லது பிர்லா நிறுவனமோ அல்ல, ஸ்டார்ட்அப் ஊழியர் அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனர் என்பது தான்,” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் இதனை நகைச்சுவையாகப் பேசினாரா அல்லது ஆர்வத்துடன் பேசுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தான், ’சிரிப்பதற்காக...’ சொன்னதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.