‘உங்க ப்ரோபைல் நல்லா இருக்கு என் நிறுவன இன்டெர்வியூக்கு வாங்க’ - அப்பாவுக்கு மகள் கொடுத்த ட்விஸ்ட்!
பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட்அப் ஒன்றின் இணை நிறுவனர் மேட்ரிமோனியல் தளத்தில் இருந்து அவரது தந்தையால் அனுப்பப்பட்ட நபரின் புரோபலை திருமணத்திற்காக ஓகே சொல்வார் என பார்த்தால், தனது நிறுவனத்திற்கு இன்டர்வியூவிற்கு வரச்சொன்ன விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட்அப் ஒன்றின் இணை நிறுவனர் மேட்ரிமோனியல் தளத்தில் இருந்து அவரது தந்தையால் அனுப்பப்பட்ட நபரின் புரோபலை திருமணத்திற்காக ஓகே சொல்வார் என பார்த்தால், தனது நிறுவனத்திற்கு இன்டர்வியூவிற்கு வரச்சொன்ன விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூருவில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் உதிதா பால் என்பவருக்கு அவரது தந்தை மேட்ரிமோனி தளத்தில் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். இதற்காக பிரபல மேட்ரிமோனி தளமான ஜீவன் சாத்தியில் தனது மகளின் விவரங்களை அவரே பதிவு செய்து புரோபல் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். மேலும் மகளின் சுயவிவரத்துடன் பொருத்திப் போகக்கூடிய மணமகன்களின் சுயவிவரங்களை அவரே தேர்வு செய்து வருகிறார்.
அப்படி ஒரு சுயவிவரத்தை உதிதா பாலுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், உதிதா அந்த நபருடன் டேட்டிங் செல்வதற்கு பதிலாக இன்டர்வியூக்கு வரும் படி மெசெஜ் செய்துள்ளார். அதற்கான காரணத்தை உதிதாவே கூறியுள்ளார்.
"கடந்த வாரம் என் பெற்றோருடன் நீண்ட நேரம் பேசிய பிறகு, நான் மேட்ரிமோனியல் தளத்தில் சேர ஒப்புக்கொண்டே. மேலும் எனது சுயவிவரத்தை என் தந்தை உருவாக்கியதால், நாங்கள் அத்தளத்தை இருவரும் இணைந்து பயன்படுத்துகிறோம். அதில், என் தந்தை எனக்கு பொருத்தமானவர் எனக் கருதிய நபரை தேர்வு செய்தார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மேலும் அவரது புரோபைலில் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு பொறுப்பு வகிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். புரோபைலில் குறிப்பிட்டிருந்த அந்த விஷயம், நாங்கள் வேலைக்குத் தேடி வந்த புரோபைல் உடன் ஒத்துப்போனது. எனவே அவரை எனது நிறுவனத்தில் பணியமர்த்துவது தொடர்பாக அவரிடம் பேசினேன். இருவருக்கும் வேலை குறித்து பரஸ்பரம் ஒத்துப்போனதால் இன்டர்வியூக்கு வர வேண்டிய தேதியையும் உறுதி செய்தோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாப்பிள்ளை வீட்டிலும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உங்கள் இருவருக்கும் எவ்விதமான கஷ்டமும் இல்லை, தர்ம சங்கடமாக நினைக்கவில்லை என்றால் மேற்கொண்டு தொடருங்கள் என அனுமதி அளித்துள்ளனர். ஆனால் துரதிர்ஷடவசமாக சந்திப்பு நிகழாமல் போயுள்ளது.
அதற்கு முன்னதாக மிகப்பெரிய ட்விஸ்ட் உதிதாவின் அப்பா வடிவில் வந்துள்ளது. அப்பாவுடன் நடந்த சுவாரஸ்யமான வாட்ஸ் அப் உரையாடலை உதிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர்,
“மேட்ரிமோனி தளத்தில் யாரும் வேலைக்கு ஆள் எடுக்க மாட்டார்கள். அவரது குடும்பத்திற்கு நான் என்ன சொல்வது? எனது போனை எடுத்து பதில் சொல்,” என சகட்டுமேனிக்கு திட்டியுள்ளார் உதிதாவின் அப்பா.
ஆனால் உதிதாவோ அப்பாவின் மெசெஜ்ஜை பார்த்துவிட்டு,
“நீங்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு ஃபின்டெக் துறையில் 7 வருட அனுபவம் உள்ளதால் எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த நினைத்தோம்,” என பதிலளித்துள்ளார்.
இந்த வாட்ஸ் அப் உரையாடல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த கலகலப்பான ட்விட்டர் உரையாடலுக்கு மேலும் வலுசேர்க்கும் வேலையை மேட்ரிமோனி நிறுவனமான ஜீவன் சாதி (Jeevansathi.com) இணைந்துள்ளது.
“உங்களிடம் இன்னும் வாய்ப்பு இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் & சரியான வாழ்க்கைத் துணைக்கு நாங்கள் விண்ணப்பிப்போம். #WeMatchBetter" எனப் பதிவிட்டுள்ளது.
தகவல் உதவி - ட்விட்டர்