Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச் சந்தையில் பச்சை விளக்கு - சென்செக்ஸ் 150+ புள்ளிகள் உயர்வு!

சர்வதேச வர்த்தக போக்குகளின் தாக்கத்தால், இந்தியப் பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து ஏறுமுகம் கண்டுள்ளன.

Stock News: பங்குச் சந்தையில் பச்சை விளக்கு - சென்செக்ஸ் 150+ புள்ளிகள் உயர்வு!

Tuesday September 10, 2024 , 1 min Read

சர்வதேச வர்த்தக போக்குகளின் தாக்கத்தால், இந்தியப் பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து ஏறுமுகம் கண்டுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.10) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 241.68 புள்ளிகள் உயர்ந்து 81,801.22 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 78.4 புள்ளிகள் உயர்ந்து 25,014.80 ஆக இருந்தது.

இதனால், முதலீட்டாளர்களிடையே இன்று ஆரம்பம் முதலே உற்சாகம் நிலவியது. அதன்பின், பெரிய அளவில் உயர்வு ஏற்படவில்லை என்றாலும் கூட, பங்குச் சந்தையில் பச்சை விளக்குடன் பாசிட்டிவ் வைப் நீடிப்பது கவனிக்கத்தக்கது.

முற்பகல் 11.20 மணியளவில் சென்செக்ஸ் 155.24 புள்ளிகள் (0.19%) உயர்ந்து 81,714.78 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 45.00 புள்ளிகள் (0.18%) உயர்ந்து 24,981.40 ஆக இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது குறிப்பிடத்தக்க ஏற்றம் காணப்பட்டது. தற்போது சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய ஆசிய பங்குச் சந்தைகளிலும் உயர்வு காணப்படுகிறது.

sensex

சர்வதேச பங்குச் சந்தைகளின் சாதகமான நிலவரம், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கூடியுள்ள ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:

பவர் கிரிட்

பாரதி ஏர்டெல்

ஆக்ஸிஸ் பேங்க்

டாடா ஸ்டீல்

என்டிபிசி

சன் பார்மா

என் அண்ட் டி

டைட்டன்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

பஜாஜ் ஃபைனான்ஸ்

மஹேந்திரா அண்ட் மஹேந்திரா

கொடாக் மஹேந்திரா

இந்திய ரூபாய் மதிப்பு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 3 பைசா உயர்ந்து டாலர் ஒன்றுக்கு ரூ.83.98 ஆக உள்ளது.


Edited by Induja Raghunathan