Stock News: தடுமாறி வந்த பங்குச் சந்தையில் மீண்டும் ஏற்றம்!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையன்று (02-05-2024) உயர்வுடன் பாசிட்டிவ் ஆக தொடங்கியுள்ளன. கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் கூடிய தடுமாற்ற நிலைமைகளுக்குப் பிறகு இன்று மீண்டும் உயர்வுடன் தொடங்கியுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையன்று (02-05-2024) உயர்வுடன் பாசிட்டிவ் ஆக தொடங்கியுள்ளன. கடந்த வார ஏற்ற இறக்க நிலைமைகளுக்குப் பிறகு இன்று மீண்டும் உயர்வுடன் தொடங்கியுள்ளது.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு 234.74 புள்ளிகள் அல்லது 0.32% உயர்ந்து 74,717.52 ஆக உள்ளது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 71.30 புள்ளிகள் அல்லது 0.32 % அதிகரித்து 22,676.15 புள்ளிகளுடன் உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் நிப்டி பேங்க் குறியீடு 21 புள்ளிகள் குறைந்து 49,375 புள்ளிகளாக உள்ளது. நிப்டி ஐடி குறியீடு மும்பைப் பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் உயர்ந்து கொண்டு வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள்
உலகப் பங்குச் சந்தைகளின் உயர்வு நிலை காரணமாகவும், குறிப்பாக ஆசியப் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வகித மாற்றங்கள் குறித்த நம்பிக்கைகளினாலும் பங்குச் சந்தை உயர்வு கண்டுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
எம் அண்ட் எம்
டாடா மோட்டர்ஸ்
ரிலையன்ஸ்
அல்ட்ரா டெக் சிமெண்ட்
எச்டிஎஃப்சி வங்கி
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெச்.சி.எல்.டெக்
பஜாஜ் பைனான்ஸ்
ஆக்சிஸ் பாங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு உயர்ந்து இன்று ரூ. 83.37 ஆக உள்ளது.