Stock News: பங்குச்சந்தை நிலவரம் - இன்று சென்செக்ஸ் சற்றே உயர்வுடன் தொடங்கியது!
மும்பைப் பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் லேசான உயர்வுத்தொடக்கமே கண்டன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று புதன்கிழமை (26-06-2024) லேசான உயர்வு கண்டன. சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 40 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சற்று முன் நிலவரப்படி, 51.32 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 78,104.84 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு வெறும் 3 புள்ளிகள் உயர்ந்து 23,724.45 புள்ளிகளாகவும் இருந்தன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 100 புள்ளிகள் சரிந்து 52,505 புள்ளிகளாக உள்ளன. நிப்டி ஐடி குறியீடு 30 புள்ளிகளும் மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 145 புள்ளிகளும் உயர்ந்து காணப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் செக்டார்களில் நிப்டி இன்ஃப்ரா லாபத்துடனும் நிப்டி மெட்டல் பங்குகள் இழப்பிலும் சென்று கொண்டிருக்கின்றன.
காரணம்:
ஆசியப் பங்குச் சந்தைகள் மந்தமாகத் தொடங்கியதை அடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளிலும் குறியீடுகள் மந்தமாகத் தொடங்கியுள்ளன.
![stock market](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/501-1719379566778.jpg?fm=png&auto=format)
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அல்ட்ரா டெக் சிமெண்ட்
கிராசிம்
ஸ்ரீராம் பைனான்ஸ்
ஆர்.ஐ.எல்.
கோட்டக் மகீந்திரா
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா ஸ்டீல்
ஹிண்டால்கோ
பஜாக் ஆட்டோ
எம் அண்ட் எம்
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே குறைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ. 83.48 ஆக உள்ளது.