Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ் உயர்வு: ஜொமாட்டோ, பேடிஎம் பங்குகள் 3% உயர்வு!
நிப்டி பேங்க் குறியீடு 271 புள்ளிகள் உயர்ந்து 50,957 புள்ளிகளாகவும் நிப்டி ஐடி குறியீடு 139 புள்ளிகள் உயர்ந்து 41,710 புள்ளிகளாகவும் மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 374புள்ளிகள் உயர்வடைந்து 55,710 புள்ளிகளாகவும் உள்ளன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (22-08-2024) சற்றே உயர்வுடன் தொடங்கியுள்ளன. மும்பைப் பங்குச்சந்தையின் பிரதான சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 200 புள்ளிகள் உயர்நிதிருந்தது
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் 148 புள்ளிகள் உயர்ந்து 81,052.80 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 48 புள்ளிகள் உயர்ந்து 24,818.00 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு 271 புள்ளிகள் உயர்ந்து 50,957 புள்ளிகளாகவும் நிப்டி ஐடி குறியீடு 139 புள்ளிகள் உயர்ந்து 41,710 புள்ளிகளாகவும் மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 374புள்ளிகள் உயர்வடைந்து 55,710 புள்ளிகளாகவும் உள்ளன.
காரணம்:
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் சமீபத்திய அறிக்கையின்படி, வட்டி விகிதக் குறைப்பு சாத்தியம் இருப்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர், இது பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்துள்ளது. உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஜொமாட்டோ
பேடிஎம்
கல்யாண் ஜுவெல்லர்ஸ்
ஷ்யாம் மெட்டலிக்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே சரிவடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.94 ஆக உள்ளது.