Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச்சந்தை நிலவரம்; சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்து பிறகு சரிவு!

மும்பை பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையன்று (14-05-2024) சற்றே உயர்வுத் தொடக்கம் கண்டு பிறகு பின்னடைவு கண்டு வருகிறது.

Stock News: பங்குச்சந்தை நிலவரம்; சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்து பிறகு சரிவு!

Tuesday May 14, 2024 , 1 min Read

மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையன்று (14-05-2024) சற்றே உயர்வுத் தொடக்கம் கண்டு பிறகு பின்னடைவு கண்டு வருகிறது.

சற்று முன் நிலவரப்படி, பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு வெறும் 4.15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 72,780 ஆக உள்ளது. அதே போல், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு வெறும் 2.20 ப்புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 22,106.25 புள்ளிகளுடன் உள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் நிப்டி பேங்க் குறியீடு நிப்டி ஐடி குறியீடுகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு மட்டுமே 276 புள்ளிகள் உயர்ந்து 45,569 புள்ளிகளுடன் உள்ளது.

சரிவுக்கான காரணங்கள்:

பங்குச் சந்தையின் தொடர் சரிவு அயல்நாட்டு ஃபோர்ட்போலியோ முதலீட்டாளார்கள் மே மாதத்தில் அதிகமாக தங்கள் முதலீடுகளை வாபஸ் பெற்றுவிட்டதாலும் சரிவு நிலையிலிருந்து மீள சென்செக்ஸ் திணறி வருகிறது. நேற்று திங்கட் கிழமை கடும் சரிவுடன் தொடங்கி பிறகு முடியும் போது சற்றே பாசிட்டிவ் ஆக நிறைவடைந்தது, இன்று மீண்டும் 200 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ் சரிவு காணத் தொடங்கியுள்ளன. முன்பு அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நிலைப்பாடு இப்போது சீனாவில் அதிக முதலீடு என்ற நிலைப்பாடாக மாறிவிட்டதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

வருண் பெவரேஜஸ்

கொச்சின் ஷிப் யார்டு

பவர் கிரிட்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்

இறக்கம் கண்ட பங்குகள்:

ஏஷியன் பெயிண்ட்ஸ்

ஆக்சிஸ் வங்கி

ஐடிசி

நெஸ்லே இந்தியா

ஐசிஐசிஐ வங்கி

இந்திய ரூபாயின் மதிப்பு:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே குறைந்து இன்று ரூ. 83.51ஆக உள்ளது.