‘தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம், இதில் என் உயிரே போனாலும் பரவாயில்லை’ - ரஜினிகாந்த்
இந்த பாதையில் நான் வெற்றி அடைவேன். அதில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
’இந்த பாதையில் நான் வெற்றி அடைவேன். அதில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு,’ - ரஜினிகாந்த்
”வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசியம்.. நிகழும்," என்ற ஸ்டேட்மென்டுடன் ஜனவரியில் கட்சித் துவக்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகியுளளது.
இந்நிலையில், கட்சி அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களில், ரஜினிகாந்த் தனது இல்லத்தில் தமிழருவி மணியனுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“2019ல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தேன். லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில், மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வரட்டும். தமிழகம் மமுழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறேன் எனக் கூறினேன். ஆனால், கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை.
“உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கொரோனா எளிதாக தாக்கும் என்பதால் மருத்துவர்கள், பிரச்சாரம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது என்று அறிவுறுத்தினார்கள். தமிழக மக்களின் பிரார்த்தனையால் உடலநலம் பெற்று மீண்டு வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சியே. கொடுத்த வாக்கில் இருந்து ஒரு போதும் மாற மாடேன். அந்த வழக்கம் எனக்கு இல்லை,” என்றார்.
இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் தேவை. அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம். மாற்றம் நடந்தே தீர வேண்டும். மாத்த வேண்டும், எல்லாவற்றையும் மாத்த வேண்டும். நான் என்பது நீங்கள்தான், மக்கள்தான் எல்லாம்.
நான் வெற்றி அடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. எனவே, இந்த நாட்டு மக்கள் எனக்குத் துணையாக நிற்க வேண்டும்.
அண்ணாத்த பட ஷூட்டிங் இன்னும் 40 சதவீதம் பாக்கி உள்ளது. ஷூட்டிங்கை முடிக்க வேண்டியது எனது கடமை. அதன்பின் கட்சி வேலைகளில் கவனம் செலுத்துவேன்.
ஏற்கனவே கட்சி வேலைகள் தொடங்கிவிட்டது. கட்சி மேற்பார்வையாராக தமிழருவி மணியனை நியமித்திருக்கிறேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியை நியமித்திருக்கிறேன்.
”இந்த பாதையில் நான் வெற்றி அடைவேன். அதில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல," என முடித்துக்கொண்டார்.