டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை: இந்தியாவின் டாப் 5 டிஜிட்டல் சேவைகள்!
2022-ல், டிஜிட்டல் பணம் செலுத்தல் ஒரு டிரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் இந்த பிரிவில் வளர்ச்சிக்கு வித்திட்டு வரும் 5 டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்.
இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை 2016 நவம்பருக்கு முன் மற்றும் பின் என பிரிக்கலாம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் டிஜிட்டல் பணம் செலுத்தலில் உண்டான எழுச்சி, தொடர்ந்து நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் தாக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி, மொபைல் போன்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உருவானது. இணைய வசதி, குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிஜிட்டல் பணம்செலுத்தலுக்கான அரசின் ஊக்கம் காரணமாக,
இந்தியாவின் டிஜிட்டல் பணம் செலுத்தும் வழிகள் மேம்பட்டு வருகிறது. இந்தியாவில், 2017ல் 200 பில்லியன் டாலராக இருந்த மொபைல் பணம் செலுத்தல், 2022ல் ஒரு டிரில்லியன் டாலராக, 5 மடங்கு வளர்ச்சி காண இருப்பதாக கிரெடிட் சுயஸ் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
என்.பி.சி.ஐக்கு சொந்தமான யுபிஐ அறிமுகம் இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தலில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. கடந்த ஆண்டு இது நாட்டின் டிஜிட்டல் பணம் செலுத்தலில் 2 சதவீதமாக அமைந்தது. இப்போது, யுபிஐ பங்களிப்பு 20 சதவீதமாக இருக்கிறது.
டிஜிட்டல் பணம் செலுத்தல் பரப்பை கவனித்து வரும் ரேசர் பேவின் சி.இ.ஓ ஹர்ஷில் மாத்தூர், மொபைல் முதலில் அணுகுமுறை மற்றும் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நாட்டின் ஒரே பணம் செலுத்தும் வழியாக இருப்பதே யுபிஐ வெற்றிக்குக் காரணம் என கூறுகிறார்.
இன்னமும் பல இடங்களில் ரொக்கம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆதிக்கமும் தொடர்ந்தாலும், டிஜிட்டல் பணம் செலுத்தலுக்கு என்று தனி இடம் உருவாகி வருகிறது. அதற்கு காரணமான சேவைகளை பார்க்கலாம்:
பேடிஎம் Paytm
விஜய் சேகர் சர்மாவால், 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட பேடிஎம் கடந்த 3 ஆண்டுகளாக டிஜிட்டல் பணம் செலுத்தல் பிரிவில் முன்னணியில் இருக்கிறது. 2017ல் முன்னிலை பெற்ற நிறுவனம், 2018ல் மொபைல் வாலெட் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை பெற்றது. 2017, பேடிஎம், 100 மில்லியல் டவுண்லோடை எட்டிய முதல் பேமெண்ட் செயலியாக விளங்கியது.
2018 ஜூலையில், பேடிஎம், ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் பரிவர்த்தனை எனும் நிலையை எட்டியது. அதன் மொத்த ஆண்டு பரிவர்த்தனை மதிப்பு 50 பில்லியன் டாலராக இருந்தது. அதே ஆண்டு, அதன் தாய் நிறுவனமான, ஒன்97 கம்யூனிகேஷனஸ், சீன நிறுவனம் அலிபாபா மற்றும் ஜப்பானிய சாப்ட்பாங்க் ஆகியவற்றிடம் இருந்து 2 பில்லியன் டாலர் நிதி பெற்றது. முதலீட்டாளர் வாரன் பப்ஃபேட்டின் நிறுவனம் பெக்ஷயர் ஹாத்வே, பேடிஎம் நிறுவனத்தில் 365 மில்லியன் டாலருக்கான பங்கை பெற்றது.
தண்ணீர், மின்சாரம், மொபைல் மற்றும் மெட்ரோ ரீசார்ட், திரைப்பட டிக்கெட், ரெயில், விமான டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக 11 மொழிகளில் பணம் செலுத்தல் மற்றும் சேவைகளை அளிப்பதோடு, பேடிஎம்’ஆல், பேடிஎம் பேமண்ட்பாங்க், மேடிஎம் மணி, பேடிஎம் கேம்பிண்ட் உள்ளிட்ட பேடிஎம் சேவைகளையும் நிறுவனம் வழங்கி வருகிறது.
நிறுவனம் 2015ல் பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றது. இப்போது 16 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
கூகுள் பே Google Pay
தேடியந்திரமாக துவங்கிய கூகுள், விளம்பரம், சந்தை, கிளவுட் சேவை, ஸ்மார்ட்போன், வாட்ச் உள்ளிட்ட பிரிவுகளிலும் தன்னை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியான டிஜிட்டல் பணம் செலுத்தலிலும் நுழைந்தது.
2015ல் ஆண்ட்ராய்டு பே’வாக அறிமுகமாகி, பின்னர் 2017ல் இந்திய சந்தையில் கூகுள் டேஸ் என நுழைந்து, தற்போது கூகுள் பே எனும் பெயரில் செயல்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமான 37 நாட்களில் கூகுள் பே, 8.5 மில்லியன் செயலி நிறுவதலை பெற்று, 40 நாட்களில் 30 மில்லியன் பரிவர்த்தனையை எட்டியது.
இப்போது, கூகுள் பே, 65 மில்லியன் தீவிர மாதாந்திர பயனாளிகள் மற்றும் இந்தியாவில் மட்டும் 110 பில்லியன் டாலர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வர்த்தகர்களுக்கான, கூகுள் பே சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
போன்பே PhonePe
ஃபிளிப்கார்ட்டின் சமீர் நிகம், ராகுல் சாரி, பர்ஜின் இஞ்சினியர் உள்ளிட்டோரால் துவக்கப்பட்ட போன்பே, 5 மில்லியனுக்கும் மேல் ஆப்லைன் வர்த்தகர் பரப்பை பெற்றுள்ளது. 2019 ஜனவரியில், இந்த மேடையில் மொத்த ஆப்லைன் வர்த்தகர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனாக இருந்ததில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
பணம் செலுத்துவதற்கான டிஜிட்டல் வாலெட்டாக செயல்படுவது தவிர, போன்பே, வாடிக்கையாளர்கள் ஓலா, மிந்த்ரா, கோஐபிபோ, ரெட்பஸ் உள்ளிட்டவற்றில் ஆர்டர் செய்வதற்கான செயலியையும் அறிமுகம் செய்தது.
மொபைல் பிரிமியர் லீக் கேம் நிறுவனத்துடனும் கூட்டு வைத்துள்ளது. சுற்றுலா, உணவு, உள்ளூர் சேவைகள், ஷாப்பிங் உள்ளிட்ட பிரிவுகளில் அதிக பார்ட்னர்களை கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வருகிறது.
ஃபிளிப்கார்ட்டுக்கு சொந்தமான போன்பே, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஃபிளிப்கார்ட் இயக்குனர் குழுவால் தனி நிறுவனமாக செயல்படுவதற்கான அனுமதியை பெற்றது. ஃபிளிப்கார்ட் 700 கோடி முதலீடு செய்துள்ளது.
அதன் பின் ஜூலை மாதம், மேலும் ரூ.698 கோடி முதலீட்டை தாய் நிறுவனத்திடம் இருந்து பெற்றது. தற்போது ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பீடு பெற்றுள்ளது.
போன்பே இந்தியாவின் 150 நகரங்களுக்கு மேல் செயல்பட்டு வருவதோடு, தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.
மொபிகுவிக் Mobikwik
பிபின் பீரித் சிங் மற்றும் உபாசானா தம்பதியால் துவக்கப்பட்ட மொபிகுவிக் 2009 முதல் செயல்பட்டு வருகிறது.
இதுவரை 118 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள மொபிகுவிக், 20 மில்லியனுக்கு மேல் கிரெடிட் கார்டு கொண்டு மற்றும் 94 மில்லியன் கார்டுகளை தன் மேடையில் சேவை வழங்கி இருப்பதாக தெரிவிக்கிறது.
உபெரி, ஐஆர்சிடிசி, ஜோமேட்டோ, டொமினோஸ், மாருதி, புளுட்டார்ட், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களாக உள்ளன. அதன் பரிவர்த்தனைகளில் 94 சதவீதம் வெற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மொபிகுவிக் தற்போது, 107 மில்லியனுக்கு மேல் பயனாளிகள் மற்றும் 3 மில்லியனுக்கு மேல் வர்த்தகர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது. 2020ல் தனது மேடையில் உள்ள மூன்று நிதிச்சேவைகளை பயன்படுத்த குறைந்தது 10 மில்லியன் பயனாளிகளை பெற திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், நிறுவனம் டிடி ஒன் நிறுவனத்துடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டது. இதன் மூலம் சர்வதேச நாடுகளில் மொபைல் ரிசார்ஜ் சேவைகளை வழங்கி வருகிறது.
அமேசான் பே Amazon Pay
மற்ற டிஜிட்டல் வாலெட்களுடன் போட்டியிடும் அளவுக்கு அமேசான் பே வேகமாக வளர்ந்து வருகிறது. அமேசான் இந்த வசதியை 2016 முதல் அளித்து வருகிறது. அதன் பிறகு, அமேசான் இந்த சேவையில் 2,771 கோடியை முதலீடு செய்திருப்பதாக டோப்லர் பிஸ்னஸ் இண்டலிஜென்ஸ் தெரிவிக்கிறது.
இந்நிறுவனம், பெங்களூருவைச் சேட்ந்த டாப்சோ செயலியை 2018 ல் கையகப்படுத்திக் கொண்டது. இந்த ஆண்டு ஜூன் மாதன், அமேசான் நிறுவனம், தனது துணை நிறுவனங்கள் மூலம் மேலும் 300 கோடி முதலீடு செய்தது. பின்னர் ஜூலையில், மேலும் ரூ.450 கோடி முதலீடு செய்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமேசான் பே, ஆண்ட்ராய்டு போன்களில் தனிநபர்களுக்கு இடையிலான பணம் அனுப்பும் வசதியை, யுபிஐ மேடை மூலம் வழங்கியது.
ஆங்கில கட்டுரையாளர்: சம்பத் புத்ரேவு | தமிழில்: சைபர்சிம்மன்