ஜப்பான் முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.125 கோடி திரட்டியது சென்னை ஸ்டார்ட்-அப் WIZFreight
டிஜிட்டல் சப்ளை செயின் ஸ்டார்ட் அப் WIZ Freight, ஜப்பானைச் சேர்ந்த எஸ்பிஐ இன்வெஸ்ட்மண்ட் நிறுவனம் தலைமை வகித்த பி சுற்று நிதியில் ரூ.125 கோடி திரட்டியுள்ளது.
எல்லைகளுக்கு இடையிலான ஃபுல்ஸ்டேக் டிஜிட்டல் சப்ளை செயின் ஸ்டார்ட் அப்பான ’விஸ் பிரைட்’ (
Freight ), ஜப்பானைச் சேர்ந்த எஸ்பிஐ இன்வெஸ்ட்மண்ட் நிறுவனம் தலைமை வகித்த பி சுற்று நிதியாக ரூ.125 கோடி நிதி திரட்டியுள்ளது. கடந்த சுற்றுக்கு பிறகான மதிப்பீட்டில் 50 சதவீத உயர்வில் ரூ.1,400 கோடி சந்தை மதிப்பீட்டில் இந்த நிதி திரட்டியுள்ளது.சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் பி சுற்று நிதியை இரண்டு கட்டங்களாக திரட்ட உள்ளது. இந்த ஆண்டு நிறைவு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ள பெரிய சுற்றின் ஒரு அங்கமாக தற்போதைய நிதி அமைந்துள்ளது. இந்த சுற்றில், டைகர் குளோபல், நிப்பான் எக்ஸ்பிரஸ் ஹோல்டிங்ஸ், ஆக்சிலார் டெக்னாலஜிஸ் பண்ட், பவுண்டமண்டல், ஆரலி இன்வெஸ்ட்மண்ட்ஸ், யூனிகான் ஷிப்புங் வென்சர்ஸ் மற்றும் ஒரு சில குடும்ப அலுவலகங்கள் இந்த சுற்றில் பங்கேற்றன.
WIZFreight, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் சர்வதேச செயல்பாடுகளை விரிவாக்க மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த லாஜிஸ்டிக்ஸ் தீர்வுகளுக்காக இந்த நிதியை பயன்படுத்த உள்ளது.
விஸ் பிரைட் நிறுவனம் சென்னையில் 2020ல் தொடர் தொழில்முனைவோர்கள் ராம்குமார் கோவிந்தராஜன், ராம்குமார் ராமசந்திரனால் துவங்கப்பட்டது. வளரும் நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் எல்லைகள் கடந்த ஷிப்மெண்ட்களை தனது தொழில்நுட்ப மேடையில் இ-காமர்ஸ் போல எளிதாக மேற்கொள்ள வழி செய்கிறது.
நிறுவனத்தின் ஏஐ சார்ந்த மேடை, உடனடி கொள்முதல் கண்டறிதல், டைனமிக் விலை, தொடர் கண்காணிப்பு, ஆவண செயல்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
இந்நிறுவனம் 2022 மார்ச் மாதம் ஏ சுற்று நிதியாக ரூ.275 கோடி திரட்டியது. டைகர் குளோபல் உடன், ஆக்சிலார் வென்சர்ஸ், பவுண்டமண்டல், ஆரலி வென்சராஸ், அல்டீரியா கேபிடல், ஸ்டிரைடு வென்சர்ஸ் இணைந்து இந்த சமபங்கு மற்றும் கடன் சுற்றில் பங்கேற்றன.
நிறுவனம் 2021 ஆகஸ்ட்டில் ஆக்சிலார் வென்சர்ஸ் தலைமை வகித்த சுற்றில் 3.5 மில்லியன் டாலர் விதை நிதி திரட்டியது.
தற்போதைய நிதி மூலம் நிறுவனம் தனது வெளிநாட்டு செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து, இந்திய செயல்பாடுகள் வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளது. இதன் மூலம் லாஜிஸ்டிக்ஸ் துறையில் தனது முன்னணி நிலையை உருவாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
“நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வகத்தில் பணியாளர்களை இரண்டு மடங்காக உயர்த்த உள்ளது. செயல்திறனை அதிகரிக்க தொழில்நுட்ப மேடையை மேம்படுத்த உள்ளோம். Eylrx.AI எனும் அதிநவீன சேவை மூலம் நிறுவனம் தனது செயல்திறனை நிருபித்துள்ளது. மேலும் பல புதுமையாக்கத்தை திட்டமிட்டுள்ளது,” என்று விஸ் பிரைட் இணை நிறுவனர், தலைவர் ராம்குமார் ராமசந்திரன் கூறியுள்ளார்.
இந்நிறுவனம் தற்போது ஐந்து நாடுகளில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. சவுதி அரேபியா, வியட்னாம், மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்ய உள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
2023 நிதியாண்டில் இவர்களின் வருவாய் ரூ.1325 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டு வருவாயை விட 300 சதவீதம் அதிகமாகும். இதே வருவாய் வளர்ச்சியை நிறுவனம் தக்க வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்திலும் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் அண்மையில் கையெழுத்திட்டது என்று இணை நிறுவனரும், சி.இ.ஓ ஆன ராம்குமார் கோவிந்தராஜன் கூறியுள்ளார்.
நிறுவனம் தற்போது இந்தியாவில் 30 இடங்களில் மற்றும் வெளிநாடுகளில் 5 நாடுகளில் 850 ஊழியர்களை பெற்றுள்ளது. அதானி, மகிந்திரா, டாடா, ஏசர், ரெக்க்டி, கிராப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் சேவையை பயன்படுத்துகின்றன.
WIZFreight சென்னையில் அதி நவீன வசதிகள் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தை வெற்றிகரமாக திறந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த மையம், சர்வதேச ஷிப்மண்ட்களுக்கான கட்டுப்பாடு கோபுரமாக விளங்குகிறது. இந்த நிதி சுற்றுக்கு ஆம்பிட் நிதி ஆலோசகராக செயல்பட்டது.
எஸ்2ஜி வென்சர்சிடம் இருந்து 33 கோடி ரூபாய் நிதி திரட்டிய சென்னை ஸ்டார்ட்-அப் Aquaconnect
Edited by Induja Raghunathan