Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

ட்ரோன்கள் வாங்க 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சகம், பெரிய அளவிலான ஆயுத கொள்முதலுக்காக ஸ்வார்ம் ட்ரோன்களை வாங்குவதற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ட்ரோன்கள் வாங்க 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

Wednesday July 27, 2022 , 2 min Read

இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சகம், பெரிய அளவிலான ஆயுத கொள்முதலுக்காக ஸ்வார்ம் ட்ரோன்களை வாங்குவதற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது பல வகையான பணிகள் ட்ரோன்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நில ஆய்வுகள், பாதுகாப்பு, கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, வான்வழி புகைப்படம் எடுத்தல், எரிவாயு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய ட்ரோன் மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதனை மெய்ப்பிக்கும் விதமாக ட்ரோன் சேவைகளை வழங்க உதவும் தொடக்கநிலை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் நடந்த மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டது.

Drone

தற்போது இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ட்ரோன்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.28,732 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில்,

ரூ.700 கோடி மதிப்பிலான ட்ரோன்களை வாங்கும் திட்டம் உள்ளதாகவும், பல்வேறு நாடுகளிலும் ட்ரோன்கள் போர்க்காலத்தில் மிக முக்கியமான சக்தியாக விளக்குவதாக இந்தியாவின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) குறிப்பிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, இந்த கொள்முதல் பட்ஜெட்டுக்கு DAC இன் ஒப்புதல் இந்திய இராணுவத்திற்கான பெரிய ஆயுதங்கள் கொள்முதல் நடைமுறையின் முதல் படியாகும். இந்த ஒப்புதல்கள், குறிப்பாக, Buy-Indian IDDM (உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட) மற்றும் வாங்க (இந்தியன்) வகைகளின் கீழ் வெவ்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

தன்னாட்சி கண்காணிப்பு மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்களை வாங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயுதப்படைகள் ஏற்கனவே பல உள்நாட்டு ட்ரோன் உற்பத்தியாளர்களுடன் கூட்டு வைத்துள்ளன. இந்த வார தொடக்கத்தில், கருடா ஏரோஸ்பேஸ், உயரமான பகுதிகளுக்குக் கூட பொருட்கள் மற்றும் மருந்துகளை உள்ளடக்கிய பேக்கேஜ்களை எடுத்துச் செல்லக்கூடிய, கண்காணிப்பு மற்றும் பார்வைக்கு அப்பால் வெகு தொலைவில் இருந்து இயக்கக் கூடிய பைலெட்டைக் கொண்ட ட்ரோன்களை அறிமுகப்படுத்தியது.

Avirtech M60 drone

A total of 23 drone startups have been shortlisted to benefit from the PLI scheme

இதேபோல், சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு முன்பு இந்தியாவின் முதல் பயணிகள் ஆளில்லா விமானத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்றது.

700 கோடி ரூபாய் பட்ஜெட் எந்த நேரத்திலும் செலவழிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது, ஏனெனில் இந்திய ட்ரோன் தொழில் இன்னும் அந்த அளவிலான தேவைக்கு ஏற்ப விநியோகத் திறன்களை உருவாக்குகிறது. கடந்த ஆண்டில், முழு ட்ரோன் துறையும் ரூ.80 கோடி மதிப்புள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கியுள்ளது, இருப்பினும் அடுத்த சில ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் - தருதர் மல்ஹோத்ரா | தமிழில் - கனிமொழி