100 நாட்கள் ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியச் சாதனைகள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆட்சியின் முதல் 100 நாட்களில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகள் பற்றி ஒரு பார்வை.
சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டாணி மீண்டும் அமோக வெற்றி பெற்றத்தையடுத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இரண்டாவதாக முறையாக ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் அவரது அரசு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் மற்றும் சாதனைகளை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைத்தது, வங்கிகள் இணைக்கப்பட நடவடிக்கை, முத்தலாக் ஒழிப்பு உள்ளிட்டவை இதில் முக்கியமாக அமைகின்றன.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் செய்த முக்கிய சாதனைகள் வருமாறு:
- அரசியல் சட்டப்பிரிவு 370 கீழ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நடவடிக்கை மேற்கொள்ளபப்ட்டது. அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ ரத்து செய்யப்பட்டது. மாநிலத்தின் சமூக, பொருளாதார கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு, ஜி-7, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளும், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலக நாடுகளின் தலைவர்களும் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
- இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
- பொதுத்துறை வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்கும் நடவடிக்கை துவக்கம். பொத்துறை வங்கிகள் மூலம் கூடுதல் கடன் வழங்கப்பட உறுதி. வங்கிகள் உரிய நேரத்தில் வட்டிக்குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை.
- அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை இறுதி செய்ய, அமைச்சங்களுக்கு இடையிலான நடவடிக்கைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- வாடிக்கையாளர்கள் துன்புறுத்தல்களைக் குறைத்து செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க ஏதுவாக, பொதுத் துறை வங்கிகள் இனி, வாடிக்கையாளர்கள் தங்களது கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களைத் திருப்பித் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை அடமானம் வைத்த கடன்தாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
- சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை அனைத்தும் 30 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவிப்பு.
- வரிவிதிப்பு – வருமானவரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், நிரந்தர கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ள மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. முக அடையாளம் இல்லாத முறையில் வரி செலுத்துவோரை ஆய்வு செய்தல். கூடுதலாக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. தொகையை திரும்ப பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
- திருமணமான இஸ்லாமியப் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிற்போக்கான முத்தலாக் நடைமுறை ரத்து செய்ய நடவடிக்கை.
- குழந்தைகள் உரிமையைப் பாதுகாத்தல்: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்தது மோடி அரசு. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டால், மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
- திருநங்கைகள் (உரிமைப் பாதுகாப்பு) சட்டம் 2019: திருநங்கைகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகுபாடு காட்டுவதைத் தடுப்பதோடு, திருநங்கைகளின் உரிமைகளை விளக்கியுள்ளது.
- ஊதியப் பாதுகாப்பை உறுதி செய்தல். ஊதிய விதிகள் 2019: மகளிர் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
- பிரதமரின் சிறு வியாபாரிகள் ஓய்வூதியத் திட்டம் 2019: இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடி சிறு வணிகர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3000 கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
- நிதி முறைகேடுகளிலிருந்து ஏழைகளைப் பாதுகாத்தல்– முறைப்படுத்தப்படாத முதலீட்டுத் திட்டங்கள் தடைச் சட்டம் 2019.
- பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் மூலம், 2019-20 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 1.95 கோடி வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.
- ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம், 2024-க்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் – பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் மூலம் 16,085 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, இதுவரை 41 லட்சம் பேர் சிகிச்சை பெற்றிருப்பதுடன், 10 கோடி இ-அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. (செப்டம்பர் 2, 2019 வரை)
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 20,622 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
- 150 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, பழங்குடியின மாணவர்களுக்கு, தரமான கல்வி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. 55 பள்ளிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.
- பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டித்ததன் மூலம், மொத்தப் பயனாளிகள் எண்ணிக்கை 6.37 கோடியாக அதிகரித்துள்ளது.
- அன்னமிடுவோரின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான ஓய்வூதியத் திட்டம் - பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதல் 3 ஆண்டுகளிலேயே 5 கோடி சிறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
- தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மோடி அரசு ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது.
- மக்களின் வாழ்வையும், தொழில் முன்னெடுப்பையும் எளிதாக்கிட 58 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
- புதுமைகளைப் புகுத்தும் நாடுகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான சர்வதேச பட்டியலில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி, 52-வது இடத்தில் உள்ளது.
- தேசியப் புலனாய்வு முகமை சட்டம், திருத்தச் சட்டம் 2019-ன் கீழ் விசாரிக்கப்படும் தீவிரவாத வழக்குகளில், சொத்துக்களைக் கைப்பற்ற/முடக்கி வைக்க தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம்.
- தேசியப் புலனாய்வு முகமை சட்டம், திருத்தச் சட்டம் 2019-ன் கீழ் தேசியப் புலனாய்வு முகமைக்கு, எல்லை தாண்டிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- மின்சார வாகனங்கள், வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியான விலையில் கிடைக்கும வகையில், அதன் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
- தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, ஃபிட் இந்தியா இயக்கத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- மிகப்பெரிய ராணுவ சீர்திருத்தமாக, பிரதமர் நரேந்திர மோடி, தமது சுதந்திர தின உரையில், முப்படைத் தளபதி பதவி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
- யோகா தினம், 170 நாடுகளில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு சர்வதேச அளவில் இந்தியாவின் அதிகாரத்தை மென்மையான முறையில் பிரதிபலித்தது.
- ஐக்கிய அரபு எமிரேட்டில் ரூபே கார்டு சேவை தொடக்கம்.
- சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொளவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரி பண்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், தண்ணீர் அழுத்தம் மற்றும் பெருங்கடல் மாசுபாடு போன்றவற்றைக் குறைப்பதில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று சுட்டிக்காட்டினார்.
விளாடிவோஸ்டோக்கிற்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் மோடி – ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதைப் பெற்றுக் கொண்டார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்