'என் மகன் வாழ்க்கையை மாற்றியதே அவர் தான்' - தினேஷ் கார்த்திக்கின் கம்பேக் பற்றி தந்தை உருக்கம்!
37 வயதில் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் கம்பேக் கொடுக்க காரணமாக இருந்த நபர் குறித்து அவரது தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.
37 வயதில் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் கம்பேக் கொடுக்கக் காரணமாக இருந்த நபர் குறித்து அவரது தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்றளவும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இடையில் 2019ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது ஊடகங்கள் முதல் சோசியல் மீடியாக்கள் வரை டி.கே.வின் கேரியர் முடிந்துவிட்டதாக விமர்சித்து வந்தன.
ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்தி அற்புதமான பினிஷராக செயல்பட்டார். இதனால் இந்தியாவின் டி20 அணியில் பங்கேற்று, தற்போது உலககோப்பை டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
![Dinesh Karthik](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Dineshkarthikcricket-1667407535121.png?fm=png&auto=format)
T202-யில் கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்:
மெல்போர்னில் அக்டோபர் மாதம் 23ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.
31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய விராட் கோலி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சமாளித்து, 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும், ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வரை கோஹ்லிக்கு துணை நின்றதோடு, 40 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் வெற்றி சமன்பாடு 2 பந்துகளில் 2 ரன்கள் ஆனது. முகமது நவாஸின் ஐந்தாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்து தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் கடைசியாக களமிறங்கிய அஸ்வின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இந்தியாவை வெற்றி வாகை சூடவைத்தார்.
ஐபிஎல் 2023 மற்றும் அடுத்தடுத்த டி20 போட்டிகளில் சிறந்த ஃபினிஷராக அங்கீகரிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது அதிருப்தி அளித்துள்ளது. 2022 டி20 உலகக் கோப்பையின் மீதமுள்ள போட்டிகளில் அவர் எப்படி விளையாடுவார் என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது.
![Dinesh Karthik](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Dineshkarthik-1667295703918.png?fm=png&auto=format)
டி.கே. தந்தை உருக்கம்:
இதனிடையே, தினேஷ் கார்த்திக்கின் தந்தை கிருஷ்ணகுமார் தனது மகன் மீண்டும் இந்தியா அணியில் இடம் பெற்றுள்ளது குறித்து பேசியுள்ளார். தினேஷ் கார்த்திக் - மீண்டும் இந்த அளவில் கிரிக்கெட் விளையாட கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
தனது மகன் இப்படி இந்திய அணிக்காக மீண்டும் இடம் பிடித்திருப்பதும், அவரது வாழ்க்கையே மாறியது ஒருவரால் மட்டுமே என தினேஷ் கார்த்திக்கின் தந்தை கிருஷ்ணகுமார் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
பயிற்சியாளர் ஆர்எக்ஸ் முரளி பவர் ஹிட்டிங்கிற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டார். பவர் ஹிட்டிங்கில் ஆர்எக்ஸ் முரளியிடம் தினேஷ் கார்த்திக் சிறப்பு பயிற்சி எடுத்தார். தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையில் அபிஷேக் நாயர் வந்த பிறகு அவருடைய கரியர் முற்றிலுமாக மாறிவிட்டது. தினேஷ் கார்த்திக்கை அதிகாலை 2 மணிக்கு எழுப்பி பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். டென்னிஸ் வீரர் உடற்தகுதிக்காக பாடுபடுவதைப் போல் எனது மகனுக்கு பிரத்யேக பயிற்சிகளை அளித்தார்.
தினேஷ் கார்த்திக் டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையைத் தொடர அபிஷேக் நாயர் தான் ஊக்கமளித்தார். அவர் தினேஷ் கார்த்திக்கிற்கு சொந்த பயிற்சியாளர் மற்றும் உளவியல் நிபுணராக செயல்பட்டார். இந்த நிலையில் அவரது கடின உழைப்பின் காரணமாக, அவர் தேசிய அணிக்கு திரும்ப முடிந்தது மற்றும் 2022 டி 20 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பகிர்ந்துள்ளார். இந்த போட்டியில் டி.கே சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை உள்ளது என்றும்,” தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்கின் அப்பா கிருஷ்ணகுமார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் 330 ரன்களை 187 ஸ்ட்ரைக் ரேட் உடன் குவித்து குறிப்பிடத்தக்கது.
![](https://images.yourstory.com/assets/images/alsoReadGroupIcon.png?fm=png&auto=format)
‘தகர வீட்டில் கண்ட கனவு’ - குடும்ப வறுமையை கிரிக்கெட் பேட்டால் தூக்கி நிறுத்திய ரோவ்மன் போவெல்!