Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

’130 கோடி இந்தியர்களின் பங்கேற்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக்க முடியும்’- நரேந்திர மோடி

2019 பொது தேர்தலுக்குப் பின் சென்னை வந்த பிரதமர் மோடி, ஐஐடி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் சிறப்புரை ஆற்றினார்.

’130 கோடி இந்தியர்களின் பங்கேற்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக்க முடியும்’- நரேந்திர மோடி

Monday September 30, 2019 , 2 min Read

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

2019 பொது தேர்தலுக்குப் பின் சென்னைக்குத் தமது முதலாவது பயணம் இது என்று பிரதமர் பேசும்போது கூறினார். சென்னை ஐஐடி-யின் வைரவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நான் வந்துள்ள போதும், என்னை வரவேற்க பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடன் பட்டுள்ளேன். 


அண்மையில் எனது அமெரிக்கப் பயணத்தில் இந்திய சமூகத்தினரிடையே நான் தமிழில் உரையாற்றியபோது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறியதை, அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிட்டிருந்தன என்று அவர் கூறினார்.

Modi

ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி


எனது அமெரிக்கப் பயணத்தின் போது, மகத்தான எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை உலகம் பார்த்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவை மகத்தான தேசமாக்குவது மட்டும் நமது பொறுப்பாக இல்லாமல், உலக சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதையும் கூட, நாம் ஏற்க வேண்டியுள்ளது.

இதனை மத்திய அரசால் மட்டும் செய்து விட முடியாது என்று கூறிய திரு மோடி, 130 கோடி இந்தியர்களால் மட்டும்தான் இது சாத்தியமாக முடியும் என்று கூறினார். ஏழையோ, பணக்காரரோ, நகரவாசியோ, கிராமவாசியோ, இளைஞரோ, முதியவரோ யாராக இருந்தாலும், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரின் முயற்சியால்தான் இதனை சாத்தியமாக்க முடியும். 

பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் பலவற்றை நாம் வெற்றிகரமாக சாதித்திருக்கிறோம் என்றும், அதே வழியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாட்டிலிருந்து நாம் விரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

பிளாஸ்டிக்கை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று நான் விரும்புவதாக சிலர் தவறுதலாகப் பொருள் கூறி வருகிறார்கள். நான் அவ்வாறு கூறவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாட்டிலிருந்து ஒழிக்க விரும்புவதாகத்தான் நான் கூறினேன். இந்த வகை பிளாஸ்டிக்குகளை ஒருமுறை மட்டும்தான பயன்படுத்த முடியும், அவை பிற்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி நாம் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பாத யாத்திரைகள் மூலம் காந்தியின் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

 

அதை அடுத்து சென்னை ஐஐடி-ன் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தன்னுடைய அமெரிக்க பயணத்தில் தான் சந்தித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியர்கள் பெரும்பாலும் ஐஐடியில் படித்தவர்கள் என்றார்.

"நீங்கள் தான் இந்தியா எனும் பிராண்டை உலக அளவில் வலுப்பெறச் செய்துள்ளீர்கள். அதே போல் இங்கும் கார்ப்பரேட் உலகில் கோல்லோச்சுபவர்களும் இங்கு படித்தவர்கள். நீங்கள் இந்தியா சுபீட்சம் அடையவும் காரணமாக உள்ளிர்கள்,” என்றார்.

மேலும் ஐஐடி மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல பிரதமர், நீங்கள் உலகில் எங்கு பணிபுரிந்தாலும், தாய் நாடு இந்தியாவின் தேவையை மறக்காமல், உங்கள் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நம் நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய பயன்களை மறந்திடாமல் உழைத்திடுங்கள். அது உங்கள் சமூகக் கடமை என்றார் மோடி. இறுதியாக,

“வருங்காலத்தின் கனவுகளை நான் உங்கள் கண்களில் பார்க்கிறேன்,” என்று மாணவர்களை நோக்கிச் சொன்னார் மோடி.

பின்னர் ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெறும் சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் 2019 நிகழ்வில் கலந்து கொண்ட பின் பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.