Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Stock News: சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம் - வங்கிப் பங்குகள் ஏற்றம்!

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி 115.20 புள்ளிகள் உயர்ந்து 81,165.20 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 29 புள்ளிகள் உயர்ந்து 24,824.45 புள்ளிகளாகவும் உள்ளன.

Stock News: சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம் - வங்கிப் பங்குகள் ஏற்றம்!

Tuesday October 08, 2024 , 1 min Read

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையான இன்று (08-10-2024) 140 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் சற்றே முன்னேற்றம் கண்டது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி, 115.20 புள்ளிகள் உயர்ந்து 81,165.20 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 29 புள்ளிகள் உயர்ந்து 24,824.45 புள்ளிகளாகவும் உள்ளன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று 379 புள்ளிகள் உயர்ந்து 50,828.20 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது. ஆனால், தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு இன்று பின்னடைவு கண்டு சுமார் 307 புள்ளிகள் சரிந்து 41,883 புள்ளிகளாக உள்ளது, நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சரிவு கண்ட பிஎஸ்இ ஸ்மால் கேப் இன்று 322 புள்ளிகள் உயர்ந்து 54450.26 புள்ளிகளாக உள்ளன.

காரணம்:

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் கணிக்க முடியாமல் உள்ளது, இன்றைய சரிவுக்கு ஐடி பங்குகள் பெரிய அளவில் பின்னடைவு கண்டதே காரணம்.

stock market

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

அல்ட்ரா டெக் சிமெண்ட்

ஆக்சிஸ் வங்கி

பாரத் எலெக்ட்ரிகல்ஸ்

எஸ்பிஐ

அதானி போர்ட்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

டாடா ஸ்டீல்

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்

ஹிண்டால்கோ

டாடா மோட்டாஸ்

டைட்டன் கம்பெனி

இந்திய ரூபாயின் மதிப்பு:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.94 ஆக உள்ளது.