‘நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தேவையான ரிஸ்க் எடுக்காவிட்டால் பின் தங்கிவிடுவீர்கள்’ - ரோனி ஸ்க்ருவாலா
டெக்ஸ்பார்க்ஸ் 2021 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் பேசிய அப்கிரோட் நிறுவனர் ரோனி ஸ்குருவாலா வாழ்நாள் கல்வி, சரியான மன நிலை, மற்றும் நாளைய வேலைவாய்ப்புக்கான மாறுபட்ட சிந்தனை பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் நன்கறிந்த பெயரான ரோனி ஸ்குருவாலா (Ronnie Screwvala) நாளைய வேலைவாய்ப்புகளின் கற்றல் மற்றும் வளர்ச்சியை தொழில்நுட்பம் விரைவுபடுத்தியிருப்பதாகத் தீவிரமாக நம்புகிறார்.
டெக்ஸ்பார்க்ஸ் 2021 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் உரையாற்றிய ஸ்க்ருவாலா, ஆன்லைன் கற்றல் மூலம் தொழில்வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வது மற்றும் எதிர்காலப் பணியிடங்கள் பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
“நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவிலும் பொருத்தமான ரிஸ்கை எடுக்காவிட்டால் நீங்கள் பின் தங்கிவிடலாம்,” என்று அவர் கூறினார்.
தொடர் தொழில்முனைவோரான ஸ்க்ருவாலா 1990-களின் யூடிவியை நிறுவி, மீடியா ஜாம்பவனாக உருவாக்கினார். பின்னர், அவர் தனியார் சமபங்கு துறையில் நுழைந்து யூனிலேசர் வென்சர்ஸ் நிறுவனத்தை துவக்கி ஸ்டார்ட் அப்களில் ஆர்ம்ப முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்.
இப்போது கல்வி நுட்ப ஸ்டார்ட் அப்பான UpGrad-ன் இணை நிறுவனர் மற்றும் ஸ்வேதேஸ் பவுட்னேஷன் நிறுவன அறங்காவலராக இருக்கும் ஸ்க்ருவாலா, கடந்த கால செயல்பாடுகள் எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக அமையாது என்பதை முக்கியமாகக் கொண்ட வழக்கத்தில் இருந்து மாறுபட்ட சிந்தனை முறையில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்.
எதிர்காலத் திறன்கள்
நாளைய உலகம் பற்றி பேசியவர், தொழில் வாழ்க்கை, கற்றல், பணியிடம் மற்றும் மனநிலை பற்றி கருத்துக்களைத் தெரிவித்தார். நாளைய பணிகளை பொருத்தவரை, தனது நிறுவனம் திரட்டும் தரவுகள் சார்ந்த திறன்கள் பற்றி குறிப்பிட்டார்.
“நாம் ஐந்து அடி முன்னே இருக்க வேண்டும். போக்குகளை முந்தும் வகையில் செயல்படாவிட்டால், வாய்ப்புகள் நழுவும் அபாயம் இருக்கிறது,” என்றார்.
ஒருவர் தருணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதாகக் கடந்த கால அனுபவம் கொண்டு முடிவுக்கு வரக்கூடாது என்றார். கதை சொல்லலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
நாளைய கல்வியை பொருத்தவரை நிறைய மாற்றங்கள் நிகழ்வதாகவும் கற்றல் என்பது வாழ்நாள் சார்ந்ததாக இருக்கப்போகிறது என்றும் கூறினார்.
“நாளைய கல்வி என்பது உள்ளடக்கம் சார்ந்தது அல்ல. இது சக உறுப்பினர்கள் சார்ந்ததாக இருக்கும்,” என்றார்.
பணியிடம் சார்ந்த மாற்றங்களை கோவிட்-19 தொற்று வேகமாக்கியிருப்பதாகக் கூறியவர், நாளை கூடுதல் பணி தேவைகளைக் கொண்டதாக இருக்கும் என்றார்.
மனநிலை
தனிநபர்களின் மனநிலை மற்றும் வளர்ச்சியில் இதன் முக்கியத்துவம் பற்றியும் பேசியவர், எப்போதும் பிரச்சனைகளைக் கண்டறிவதில் திறன் மிக்கவர்கள் மற்றும் அவற்றுக்கு அவர்கள் தீர்வு காணும் விதத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“மனநிலை அம்சம் தான் வேறுபாடாக அமையும்,” என்றார். மென் திறன்களும் முக்கியம் என்றார்.
இந்தியாவின் கல்விமுறை இத்தகைய ஆற்றலை கற்றுத்தருவதில்லை என்று கூறியவர், எதிர்காலத்தில் மென் திறன்கள் முக்கியமாகும் என்றார்.
“மூன்று அல்லது நான்கு மென் திறன்கள் இல்லாவிட்டால் பணியிடத்தில் முன்னேற முடியாது என்றவர், கீழ் மத்தியதர குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், சில மென் திறன்களால் தான் முன்னேறியதாகக் குறிப்பிட்டார்.”
எதிர்காலம் என்பது ஆருடம் அல்ல. எண்ணம் செயலியின், தெளிவு மூலம் செயல்களை நிறைவேற்றுவதற்கான உறுதியே, என்றும் அவர் கூறினார்.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி | தமிழில்: சைபர் சிம்மன்