கிரிக்கெட் முதல் ஸ்டார்ட்அப் வரை - Techsparks மும்பையில் சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்த தினேஷ் கார்த்திக்!
மும்பையில் நடந்த டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து
மும்பையில் நடந்த டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களால் டி.கே. என அன்புடன் அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக் மும்பையில் நடந்த டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது வருகையும், உரையாடலும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தொழில்முனைவோர் இடையிலும் உற்சாகத்தை ஊக்குவித்தது.
தினேஷ் கார்த்திக் தனது உரையாடலின் போது, கிரிக்கெட் வீரராக தனது ரோலர்-கோஸ்டர் பயணம், தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அவரது தீவிர விருப்பம், வாழ்க்கை பயணத்தில் அவர் சந்தித்த தடைகள், அவருக்குக் கிடைத்த ஆதரவு ஆகியவை குறித்த முக்கிய தகவல்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
தனது 38வது வயதில் கிரிக்கெட் வர்ணனையாளராக புது அவதாரம் எடுத்திருக்கும் தினேஷ் கார்த்திக், 19 வயதில் இந்தியாவுக்காக விளையாட களமிறங்கிய போது, கிரிக்கெட் மீது எவ்வளவு ஆர்வத்துடன் இருந்தாரோ, அதே அளவு உற்சாகத்துடன் தனது அனுபவங்களை டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
“நான் இப்போது நிறைய கிரிக்கெட் வர்ணனை செய்கிறேன். எனவே, அணியினர் மற்றும் விளையாட்டைப் புரிந்துகொள்வது, மிக முக்கியமாக, நான் சொல்வதைக் கேட்கும் உங்களைப் போன்றவர்களுடன் தொடர்புகொள்வது எனது வாழ்க்கையின் மிக மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது,” எனக்கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்கை ஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த போது, ஆரம்பத்தில் தினேஷ் கார்த்திக் மிகவும், தயங்கியுள்ளார். ஏனெனில், அவரது இந்த வேலை தனது கிரிக்கெட் பயணத்திற்கு முடிவாக அமைந்துவிடும் என நினைத்தார். இருப்பினும், குடும்பத்தினரின் ஊக்கமும், தினேஷ் கார்த்திக்கின் புதிய விஷயங்களை முயற்சிக்கும் குணமும் வர்ணனையாளராக பணியைத் தொடர வைத்தது.
உதாரணமாக, மிகச் சிறிய வயதில் கூட, அவருக்கு தனிப்பட்ட பயிற்சியாளர் இருந்தார், இது கிரிக்கெட்டில் மிகவும் பொதுவானதல்ல. வர்ணனையைத் தவிர, டிகேவுக்கு சக கிரிக்கெட் வீரர்கள் போலவே ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.
"நான் இரண்டு ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளேன், இது நான் மிகவும் உற்சாகமாக இருக்கும் இடம்," என்று அவர் கூறினார்.
ரீ என்ட்ரி:
தினேஷ் கார்த்திக் டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள், டுவென்டி 20 இன்டர்நேஷனல் ஆகிய போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இறுதியாக 2022ம் ஆண்டு T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததன் மூலமாக அவர் கம்பேக் கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விக்கெட் கீப்பிங் திறன்:
தினேஷ் கார்த்திக்கின் கூர்மையான விக்கெட் கீப்பிங் திறன் 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த சர்வதேச போட்டியில் எதிரொலித்தது. அப்போது 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிக்கொண்டிருந்தது. அதன் கேப்டனான மைக்கேல் வாகனை ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சி மூலம் ஸ்டம்பிங் செய்து தினேஷ் கார்த்திக் வீழ்த்தினார். இதனால் வாகன் 155வது ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.
டிகேயின் கூர்மையான விக்கெட் கீப்பிங் திறமை அந்த போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், அவர் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு கடுமையான போட்டியை எதிர்கொண்டார். குறிப்பாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அவர் பல தடைகளை தகர்க்க வேண்டியிருந்தது.
“என்னைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எனது பசி. நான் எப்பொழுதும், பல வழிகளில், எம்எஸ் தோனியைப் பற்றிப் படிப்பவனாக இருந்தேன். எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, அப்போது தான் இந்த விளையாட்டை நான் தொடர்ந்து விளையாட விரும்பினால், பல திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். சில சமயம் நான் ஓப்பனராகப் போவேன், சில சமயம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகச் செல்வேன், சில சமயம் பினிஷராகப் போவேன், எதுவாக இருந்தாலும் சரி, என்னை நான் பல்வேறு வழிகளில் உந்தித்தள்ளியதால், மற்ற வீரர்களுக்கு கடினமாக தெரிந்த ரோல்கள் கூட எனக்கு எளிமையாக இருந்தது,” என்றார்.
2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான நிதாஹாஸ் டிராபி T20I போட்டியின் இறுதிப் போட்டியின் போது, ஒரு ஃபினிஷராக DK-விற்கு மிகவும் மறக்கமுடியாத மறுபிரவேசமாக இருந்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில், DK அதிரடியாக உயர்ந்து, பரபரப்பான இன்னிங்ஸை விளையாடி, கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
முதல் டிவிஷன் கிரிக்கெட் வீரரான, டிகேயின் தந்தை அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆம், சென்னையில் ஃபர்ஸ்ட் டிவிஷன் போட்டிகளில் விளையாடியுள்ளார். இளம் வயதில் கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட தினேஷ் கார்த்திக்கின் தந்தை கிருஷ்ண குமார் மீது அவரது பெற்றோர் கல்வி மீது செலுத்திய அழுத்தம் காரணமாக தொடர முடியாமல் போனது.
“உங்கள் வீட்டில் தோல்வியுற்ற கிரிக்கெட் வீரர் இருக்கும்போது, அவர் தங்கள் குழந்தைகளை அந்த விளையாட்டை விளையாடத் தள்ளி, முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். அப்படித்தான் நான் கிரிக்கெட்டில் நுழைந்தேன். முதல் முறையாக நான் விளையாடியபோது, எனக்கு அந்தளவு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இல்லை” என்றார்.
தோல்வியும் அழுத்தமும்:
தனது கிரிக்கெட் பயணத்தில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்த டி.கே., தோல்விகளை பின்னூட்டமாக பார்க்க கற்றுக்கொண்டார்-இந்த முன்னோக்கு அவரது வளர்ச்சிக்கு முக்கியமாகும் எனக்கூறியுள்ளார்.
"அப்போதுதான் நீங்கள் உலகம் பார்க்க பெரிதாக பிரகாசிக்கிறீர்கள். எனவே, அழுத்தமும் தோல்வியும் எப்போதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்."
டிகே, M S தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டின் அழுத்தங்களைச் சமாளித்த சிறந்த கேப்டன்களுடன் இணைந்து விளையாடியுள்ளார். அவர்களை ஒரு வார்த்தையில் விவரிக்கக் கேட்ட போது,
தோனியை "கூல்", கோஹலி "கடுமையானவர்" மற்றும் ஷர்மாவை "வேடிக்கையானவர்" என அடையாளப்படுத்தியுள்ளார்.
வரவிருக்கும் ஐபிஎல் சீசன்:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரவிருக்கும் சீசன் பற்றி பேசுகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) உரிமைக்காக விளையாடும் டிகே, பல வலுவான அணிகள் இருக்கும்போது தான் ஒரு போட்டி உண்மையிலேயே போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறும் என்றார். சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மிகவும் கடினமாக (மும்பை இந்தியன்ஸில்) வரும், எனத் தெரிவித்துள்ளார்.
‘ஃபண்டிங் மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வல்ல’ - பைஜூஸ் பின்னடைவு குறித்து upGrad தலைவர் ரோனி ஸ்க்ரூவாலா!