தமிழகத்தில் EV சார்ஜிங் உட்கட்டமைப்பு; ரூ.50 கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்!
ஜப்பானைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெர்ரா மோட்டார்ஸ், தமிழகத்தில் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த ₹50 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான 'Terra Motors' தமிழகத்தில் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த ₹50 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024ல் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளில் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
அந்த வரிசையில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் முன்வந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, ரூ.50 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. டெர்ரா மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான அகிஹிரோ உடே,
“இந்த மைல்கல் பார்ட்னர்ஷிப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய் மூலோபாய முதலீடு ஏற்கனவே உள்ளதை மேம்படுத்த எங்களுக்கு உதவும். எங்கள் கூட்டாண்மை உலகளாவிய EV துறையில் புதிய தரங்களை அமைக்கும் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
மேலும், டெர்ரா மோட்டார்ஸ் 2014 முதல் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார். இந்நிறுவனம் இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, வாகன பைனான்ஸ் மற்றும் சார்ஜிங் நிலையங்களை அமைத்து வருகிறது.
டெர்ரா மோட்டார்ஸ் சமீபத்தில் புனே, ஹைதராபாத், குர்கான், பெங்களூர், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய ஆறு இந்திய நகரங்களில் அதன் EV சார்ஜிங் உள்கட்டமைப்பிற்கான புதிய அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் இந்தியா முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசாங்கத்துடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவில் விரிவடைவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை முறைப்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் EV சந்தையின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப திறமையான மின்சார வாகன தீர்வுகளை வழங்க நிறுவனம் அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய சந்தை அறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து இயக்கத்திற்கு பங்களிக்கும், புதிய பதிவுசெய்யப்பட்ட தனியார் வாகனங்களில் 30% மின்சாரம் என்ற இலக்கை அடைய உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அமைய உள்ள ஓலா ஹப்பில் 25,000 பேருக்கு வேலை - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பாவிஷ் அகர்வால்!