‘எனது கணவரே எனது சிறந்த நண்பர்’ - குடும்பம், பிள்ளைகளுடனான உறவு பற்றி மனம் திறந்த நீதா அம்பானி!
தானும் தனது கணவர் முகேஷ் அம்பானியும் இளமையில் செய்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இன்று வரை தொடர்ந்து செய்ய விரும்புவதாக நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
தானும் தனது கணவர் முகேஷ் அம்பானியும் இளமையில் செய்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இன்று வரை தொடர்ந்து செய்ய விரும்புவதாக நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
1985ம் ஆண்டு திருமணமான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதிக்கு ஈஷா (32) மற்றும் ஆகாஷ் - ஆனந்த் (28) என இரட்டையர்கள் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்டின் தலைவராக ஆகாஷ் உள்ளார். ரிலையன்ஸ் ரீடெய்ல் பிசினஸை ஈஷா அம்பானியும், எனர்ஜி சம்பந்தமான தொழில்களை ஆனந்த் அம்பானியும் கவனித்து வருகின்றனர்.
நீதா அம்பானி சமீபத்தில் சிஎன்பிசி இன்டர்நேஷனலுக்கு அளித்த பேட்டியில், தனது கணவர் முகேஷ் அம்பானி மற்றும் பிள்ளைகளுடனான உறவு குறித்து மனம் திறந்துள்ளார்.
எனது சிறந்த நண்பர்:
கணவரான முகேஷ் அம்பானியை தனது சிறந்த நண்பர் என நீதா அம்பானி அடையாளப்படுத்தியுள்ளார்.
"நாங்கள் ஒருவருக்கொருவர் நிறைய கற்றுக்கொண்டோம். சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுதான் மிக முக்கியமான முடிவு என எனது குழந்தைகளிடம் எப்போதும் கூறுவேன். எனது சிறந்த நண்பரும் எனது வாழ்க்கைத் துணைவருமான முகேஷ் கிடைத்ததில் நான் மிகவும் பாக்கியசாலி. மேலும், உங்களுக்குக்கே தெரியும், நாங்கள் எங்கள் குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் வளர்த்து, வாழ்க்கைப் பயணத்தையும் அனுபவித்து வருகிறோம்.”
தம்பதியினர் இளமையாக இருந்தபோது செய்ததையே இப்போதும் விரும்புவதாக கூறுகிறார்.
“அவர் இப்போதும் என்னை கார் ரைட் அழைத்துச் செல்கிறார். ஹிந்தி பாடல்களை கேட்பது, தெரு உணவுகளை சாப்பிடுவது பிடிக்கும். எனக்கு சாலையோர கடைகளில் பேபெல் பூரியும், அவருக்கு தோசை இட்லியும் பிடிக்கும்.”
பிள்ளைகளுக்குள் வேறுபாடியில்லை:
பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என எப்போதும் தனது பிள்ளைகளிடையே வேறுபாடு பார்த்தது கிடையாது என நீதா அம்பானி பெருமிதம் கொள்கிறார்.
மும்பை கலாச்சார மையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வேலைகளில் ஈஷா தன்னுடன் இணைந்து பணியாற்றியதை நீதா அம்பானி நினைகூர்ந்துள்ளார்.
“பெண்கள் தாங்கள் சமமானவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களை விட குறைவானர்கள் இல்லை. என் பையன்களால் முடிந்ததை, என் மகளாலும் செய்ய முடியும்,” என்கிறார்.
நீதா அம்பானியின் வார்த்தைகளை பிரதிபலிக்கும் வகையில் ஈஷா அம்பானி திருமணமாகி, இரட்டை குழந்தைகளுக்கு தாயான போதும், தனது சகோதரர்களுக்கு நிகராக ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தை திறம்பட நடத்தி வருகிறார்.
"ஆகாஷ், இஷா, ஆனந்த் ஆகியோர் அனைத்து இளம் தலைமுறையினர், ரிலையன்ஸ் மற்றும் இந்தியாவுக்கு அடுத்த தலைமையாக இருக்கப் போகிறார்கள். மூவரிடமும், நான் வெவ்வேறு குணங்களைக் காண்கிறேன். என் இளைய மகன் ஆனந்த் உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதில் நம்பிக்கை கொண்டுள்ளார். ஜியோ மூலம் டிஜிட்டல் புரட்சியை ஆகாஷ் முன்னெடுத்து வருகிறார். ஈஷா; ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனில் தீவிர ஆர்வம் காட்டுவதைத் தவிர சில்லறை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளார். அவர்கள் மூவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.”
உங்கள் வெற்றிகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வதை விட உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் அதிகம் கற்றுக்கொள்கிறீர்கள். பணிவாக இருங்கள், இரக்கத்துடன் இருங்கள். மக்களை மரியாதையுடன் நடத்துங்கள். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என ரிலையன்ஸ் குழுமத்தை வழிநடத்தவுள்ள தனது இளம் தலைமுறை வாரிகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
தகவல் உதவி: சிஎன்பிசி
‘தகுதி, திறமை இருந்தால் வாரிசுகள் நிறுவன தலைமைப் பொறுப்பில் இருப்பதில் தவறில்லை’ - இன்போசிஸ் நாராயணமூர்த்தி!